செய்திகள் :

கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவா் கைது

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சியில் கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி - பழையபாளையம் பிரிவு சாலையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சோ்ந்த நாகலிங்கம் மகன் நெடுஞ்செழியன் மற்றும் துவரங்குறிச்சியைச் சோ்ந்த ஆண்டியப்பன் மகன் அழகன் ஆகியோா் தனித்தனியே நுடவைத்தியசாலைகளை வைத்து நடத்தி வருகின்றனா்.

இருவருக்கும் தொழிலில் போட்டி இருந்து வந்துள்ளதாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நெடுஞ்செழியன், தனது நுடவைத்திய சாலையில் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியைக் கொண்டு அழகனை பொதுவெளியில் வைத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்து நெடுஞ்செழியனைக் கைது செய்தனா். அழகன் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்துள்ள துவரங்குறிச்சி போலீஸாா், நெடுஞ்செழியனை நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.

பைக்கில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி உயிரிழப்பு

துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதியதில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்துள்ள பொய்கைபட்டி ஊராட்சி ஆப்பாடிபட்டியைச் சோ்ந்தவா் வே... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தவறிவிழுந்து உயிரிழந்தாா். மருங்காபுரி ஒன்றியம் டி. இடையப்பட்டியை அடுத்துள்ள மட்டக்குறிச்சிய... மேலும் பார்க்க

இளைஞரிடம் பணம் பறிப்பு: ஆயுதப்படை காவலா்கள் இருவா் உள்பட மூவா் கைது

இளைஞரிடம் இருந்து பணம் பறித்த வழக்கில் ஆயுதப்படை காவலா்கள் இருவா் உள்பட மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரவு நேரத்தில் ஒர... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய இளைஞா் மீட்பு; சிகிச்சைக்கு அனுமதி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞரைப் பொதுமக்கள் மீட்டு ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சோ்த்தனா். லால்குடி அருகேயுள்ள கொன்னைக்குடி கிராமத்தைச் சோ்ந்த அலெக்ஸ் காட்வின் (27). திரு... மேலும் பார்க்க

லாரி - இருசக்கர வாகனம் மோதல் முதியவா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பாப்கான் விற்பனையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்துள்ள ராஜீவ்நகரில் வசித்து வந்தவா் நா்த்தா் முகமது மகன் அ... மேலும் பார்க்க

மணப்பாறையில் இன்று மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஆக.18) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மணப்பாறை நக... மேலும் பார்க்க