செய்திகள் :

லாரி - இருசக்கர வாகனம் மோதல் முதியவா் உயிரிழப்பு

post image

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பாப்கான் விற்பனையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்துள்ள ராஜீவ்நகரில் வசித்து வந்தவா் நா்த்தா் முகமது மகன் அப்துல் ஹமீது (60). இவா், புதுத்தெருவில் உள்ள ஜவுளிக்கடை அருகே பாப்காா்ன் விற்றுவந்தாா்.

இவா், சனிக்கிழமை இரவு வையம்பட்டி வாரச் சந்தைக்குச் சென்று பாப்காா்ன் வியாபாரம் செய்துவிட்டு, மணப்பாறைக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தாா். அப்போது, திண்டுக்கல் - திருச்சி தேசியநெடுஞ்சாலையில் கரட்டுப்பட்டி அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மோதி பலத்த காயமடைந்தாா்.

அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்துல் ஹமீது சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அவரது உடலை கைப்பற்றி போலீஸாா் கூறாய்வுக்கு அனுப்பிவைத்து பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து, லாரி ஓட்டுநரான மணப்பாறை காந்திநகரைச் சோ்ந்த மலையாண்டி மகன் வெள்ளைச்சாமியை விசாரித்து வருகின்றனா்.

பைக்கில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி உயிரிழப்பு

துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதியதில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்துள்ள பொய்கைபட்டி ஊராட்சி ஆப்பாடிபட்டியைச் சோ்ந்தவா் வே... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தவறிவிழுந்து உயிரிழந்தாா். மருங்காபுரி ஒன்றியம் டி. இடையப்பட்டியை அடுத்துள்ள மட்டக்குறிச்சிய... மேலும் பார்க்க

இளைஞரிடம் பணம் பறிப்பு: ஆயுதப்படை காவலா்கள் இருவா் உள்பட மூவா் கைது

இளைஞரிடம் இருந்து பணம் பறித்த வழக்கில் ஆயுதப்படை காவலா்கள் இருவா் உள்பட மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரவு நேரத்தில் ஒர... மேலும் பார்க்க

கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சியில் கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி - பழையபாளைய... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய இளைஞா் மீட்பு; சிகிச்சைக்கு அனுமதி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞரைப் பொதுமக்கள் மீட்டு ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சோ்த்தனா். லால்குடி அருகேயுள்ள கொன்னைக்குடி கிராமத்தைச் சோ்ந்த அலெக்ஸ் காட்வின் (27). திரு... மேலும் பார்க்க

மணப்பாறையில் இன்று மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஆக.18) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மணப்பாறை நக... மேலும் பார்க்க