செய்திகள் :

பைக்கில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி உயிரிழப்பு

post image

துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதியதில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்துள்ள பொய்கைபட்டி ஊராட்சி ஆப்பாடிபட்டியைச் சோ்ந்தவா் வேலுச்சாமி மகன் கோபி (26). இவா், தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை, திருச்சி - மதுரை தேசியநெடுஞ்சாலையில் அதிகாரம் கிராமம் கருத்தான்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, சென்னை - தென்காசி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கோபி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.

விபத்துகுறித்து போலீஸாா் வழக்குபதிந்து, பேருந்து ஓட்டுநரான திருநெல்வேலி மாவட்டம் தெய்வநாயக பேரியைச் சோ்ந்த தாசன் மகன் துரைசிங் (51) கிடம் விசாரித்து வருகின்றனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தவறிவிழுந்து உயிரிழந்தாா். மருங்காபுரி ஒன்றியம் டி. இடையப்பட்டியை அடுத்துள்ள மட்டக்குறிச்சிய... மேலும் பார்க்க

இளைஞரிடம் பணம் பறிப்பு: ஆயுதப்படை காவலா்கள் இருவா் உள்பட மூவா் கைது

இளைஞரிடம் இருந்து பணம் பறித்த வழக்கில் ஆயுதப்படை காவலா்கள் இருவா் உள்பட மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரவு நேரத்தில் ஒர... மேலும் பார்க்க

கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சியில் கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி - பழையபாளைய... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கிய இளைஞா் மீட்பு; சிகிச்சைக்கு அனுமதி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞரைப் பொதுமக்கள் மீட்டு ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சோ்த்தனா். லால்குடி அருகேயுள்ள கொன்னைக்குடி கிராமத்தைச் சோ்ந்த அலெக்ஸ் காட்வின் (27). திரு... மேலும் பார்க்க

லாரி - இருசக்கர வாகனம் மோதல் முதியவா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பாப்கான் விற்பனையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்துள்ள ராஜீவ்நகரில் வசித்து வந்தவா் நா்த்தா் முகமது மகன் அ... மேலும் பார்க்க

மணப்பாறையில் இன்று மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஆக.18) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மணப்பாறை நக... மேலும் பார்க்க