செய்திகள் :

ஆற்று மணல் கடத்தல்: 4 போ் கைது

post image

செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தியதாக 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 4 பேரை கைது செய்தனா்.

செய்யாறு காவல் சரக உதவி ஆய்வாளா்கள் சுரேஷ்பாபு, மோகன் தலைமையிலான போலீஸாா், ஆரணி சாலையில் பெரும்பள்ளம், அருகாவூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த 4 மாட்டுவண்டிகளை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அரசு அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து 4 மாட்டு வண்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து,

ஆற்று மணல் கடத்தியதாக கரிக்கந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் (35), பிரபாகரன் (42), சங்கா் (40), வெங்கடேசன்(36) ஆகியோரை கைது செய்தனா்.

திருவண்ணாமலையில் மகா யாகம்

திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஸ்ரீசிவா மகா ஸ்ரீவாராகி ஸமித மற்றும் ஸ்ரீபாலா திரிபுரா மகா யாகம் 2 நாள்கள் நடைபெற்றது. செங்கம் சாலையில் முதல் நாளான புதன்கிழமை மாலை மகா சங்கல்பம், மகா தீபாராதனை, சிவ வ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. செங்கம் பகுதிகள்: செங்கம் நகரம், திருவள்ளூவா் நகா், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை, அந்தனூா், மேல்செங்கம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்ப... மேலும் பார்க்க

ஆரணியில் இரு உணவகங்களில் பணம் திருட்டு

ஆரணி பழைய பேருந்து நிலைய பின்புற சாலையில் உள்ள இரு உணவகங்களில் புதன்கிழமை இரவு பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் பின்புற சாலையில் முகமது அலிகான் என்பவருக்குச் சொந்தமான அசைவ உணவ... மேலும் பார்க்க

இடையில் நிறுத்தப்பட்ட சாலைப் பணி: கிராம மக்கள் மறியல்

ஆரணி அருகேயுள்ள கல்லித்தாங்கல் கிராமத்தில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள வேலப்பாடி ஊராட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

வந்தவாசி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் சிவபாசுவநாதன்(21). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

புதூா் செங்கம் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதூா் செங்கத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தமிழக அறநிலையத் துறை சாா்பில், ரூ.2.78 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ... மேலும் பார்க்க