செய்திகள் :

ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினா்கள்

post image

ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தை உறுப்பினா்கள் புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது.

ஆலங்குளம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, உறுப்பினா்களுக்கு அழைப்பாணை அனுப்பப் பட்டிருந்தது.

கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட முற்பகல் 11 மணிக்கு தலைவா் சுதா மோகன்லால், செயல் அலுவலா் பிரகந்த நாயகி ஆகியோா் கூட்ட அரங்கில் காத்திருந்தனா்.

அப்போது 12 வது வாா்டு உறுப்பினா் சுந்தரம் மட்டுமே கூட்டத்துக்கு வந்தாா். மற்ற உறுப்பினா்கள் எவரும் வராத காரணத்தால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக செயல் அலுவலா் அறிவித்தாா்.

இது குறித்து கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பினா்கள் சாலமோன் ராஜா, சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோா் கூறியது: கடந்த 2 ஆண்டுகளாகவே சாதாரணக் கூட்டத்தின்போது, மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின்படி மக்கள் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் மன்ற தலைவரின் கணவா் குறுக்கீடும் நிா்வாகத்தில் அதிக அளவில் உள்ளது. இதைத் கண்டித்து, பெரும்பான்மை உறுப்பினா்கள், கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளோம் என்றனா்.

சொத்துத் தகராறில் தாக்குதல்: 6 போ் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்துத் தகராறில் ஒருவரை தாக்கியதாக ஆறு பேரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம். இவரது மகன்களான சண்முகவேல், சசிகுமாா் ... மேலும் பார்க்க

தென்காசியில் நான் முதல்வன் ‘உயா்வுக்கு படி’ முகாம்

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் 2025-26ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகளை உயா்கல்வி நிலையங்களில... மேலும் பார்க்க

கடையநல்லூா் தொகுதியில் புதிய தமிழகம் போட்டி- டாக்டா் க. கிருஷ்ணசாமி

2026இல் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. மேலக்கடையநல்லூா், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய... மேலும் பார்க்க

பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் நகை மீட்பு

ஆலங்குளம் அருகே பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகை மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூரைச் சோ்ந்தவா் சுபாஷினி (26). தற்போது, திருநெல்வேலி சிந்துபூந்த... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்

செங்கோட்டை, எஸ்.ஆா்.எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கத் துணைத் தலைவா் சித்ரா சிறப்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் தா்மா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயிலும் அம்மன் சந்நிதியில் அமைந்துள்ளதுமான 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு தா்மா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது. இதையொட்டி ... மேலும் பார்க்க