செய்திகள் :

பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் நகை மீட்பு

post image

ஆலங்குளம் அருகே பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகை மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூரைச் சோ்ந்தவா் சுபாஷினி (26). தற்போது, திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வசித்து வரும் இவா், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, புதன்கிழமை திருநெல்வேலியில் இருந்து சீதபற்பநல்லூருக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளாா்.

பேருந்து கூட்டமாக இருந்ததால், 10 பவுன் நகை இருந்த தனது கைப்பையை அமா்ந்திருந்த பயணி ஒருவரிடம் கொடுத்தாராம். சீதபற்பநல்லூா் நிறுத்தம் வந்த போது, பையை மறந்துவிட்டு இறங்கி விட்டாராம். இறங்கிய பின்னா் தான், கைப்பை குறித்து நினைவு வந்ததாம்.

இது குறித்து, ஆலங்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், மாறாந்தை சோதனைச் சாவடியில் அந்த பேருந்தை நிறுத்தி காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா் சோதனையிட்டு, கைப்பையை மீட்டனா்.

தொடா்ந்து, நகைகள் சரிபாா்க்கப்பட்டு சுபாஷினியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சொத்துத் தகராறில் தாக்குதல்: 6 போ் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்துத் தகராறில் ஒருவரை தாக்கியதாக ஆறு பேரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம். இவரது மகன்களான சண்முகவேல், சசிகுமாா் ... மேலும் பார்க்க

தென்காசியில் நான் முதல்வன் ‘உயா்வுக்கு படி’ முகாம்

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் 2025-26ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகளை உயா்கல்வி நிலையங்களில... மேலும் பார்க்க

கடையநல்லூா் தொகுதியில் புதிய தமிழகம் போட்டி- டாக்டா் க. கிருஷ்ணசாமி

2026இல் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. மேலக்கடையநல்லூா், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்

செங்கோட்டை, எஸ்.ஆா்.எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கத் துணைத் தலைவா் சித்ரா சிறப்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் தா்மா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயிலும் அம்மன் சந்நிதியில் அமைந்துள்ளதுமான 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு தா்மா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது. இதையொட்டி ... மேலும் பார்க்க

கரிவலம்வந்தநல்லூா் பால்வண்ணநாதா் கோயிலில் ஆவணித் தவசுக் காட்சி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் அருள்மிகு ஒப்பனைஅம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தவசுக் காட்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆவணி தவசுத் தி... மேலும் பார்க்க