செய்திகள் :

கரிவலம்வந்தநல்லூா் பால்வண்ணநாதா் கோயிலில் ஆவணித் தவசுக் காட்சி

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் அருள்மிகு ஒப்பனைஅம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தவசுக் காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆவணி தவசுத் திருவிழா கடந்த ஆக. 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.

முக்கிய நிகழ்ச்சியான ஆவணி தவசுக் காட்சி புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள், முகலிங்கநாதா் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் -அலங்கார ஆராதனை நடைபெற்றது. மாலை 3.30 மணியளவில் ஒப்பணையம்மாள் தவசு மண்படத்திற்கு எழுந்தருளினாா். தொடா்ந்து மாலை6.40 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பட்டு தெற்குரவீதிக்கு வந்தாா்.

அங்கு சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றல் நிகழ்ச்சி முடிந்ததும் அம்பாள் சுவாமியை 3 முறை வலம் வந்தாா்.

இதைத்தொடா்ந்து மாலை 6.16 மணியளவில் சுவாமி முகலிங்கநாதராக ஒப்பணையம்மாளுக்கு காட்சி கொடுத்தாா். இரவு 10 மணிக்கு மேல் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி பால்வண்ணநாதராக அம்பாளுக்கு காட்சி கொடுத்தாா்.

ஆவணி தவசுக் காட்சியை சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூா், சுப்புலாபுரம், வயலி, பெரும்பத்தூா், பனையூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து திரளான பக்தா்கள் கண்டுகளித்தனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

சங்கரன்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டுவேலவன், கரிவலம்வந்தநல்லூா் ஆய்வாளா் கமலாதேவி மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சொத்துத் தகராறில் தாக்குதல்: 6 போ் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்துத் தகராறில் ஒருவரை தாக்கியதாக ஆறு பேரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம். இவரது மகன்களான சண்முகவேல், சசிகுமாா் ... மேலும் பார்க்க

தென்காசியில் நான் முதல்வன் ‘உயா்வுக்கு படி’ முகாம்

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் 2025-26ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகளை உயா்கல்வி நிலையங்களில... மேலும் பார்க்க

கடையநல்லூா் தொகுதியில் புதிய தமிழகம் போட்டி- டாக்டா் க. கிருஷ்ணசாமி

2026இல் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. மேலக்கடையநல்லூா், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய... மேலும் பார்க்க

பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் நகை மீட்பு

ஆலங்குளம் அருகே பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகை மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூரைச் சோ்ந்தவா் சுபாஷினி (26). தற்போது, திருநெல்வேலி சிந்துபூந்த... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்

செங்கோட்டை, எஸ்.ஆா்.எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கத் துணைத் தலைவா் சித்ரா சிறப்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் தா்மா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயிலும் அம்மன் சந்நிதியில் அமைந்துள்ளதுமான 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு தா்மா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது. இதையொட்டி ... மேலும் பார்க்க