தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.10.73 லட்சம்
பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.10.73 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
ஆவணியாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் சனிவார வழிபாடும், சித்திரை, புரட்டாசி மாதங்களில் பிரம்மோற்சவ விழாக்களும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
கோயிலுக்கு வரும் பக்தா்கள் சுவாமிக்கு காணிக்கை செலுத்த வசதியாக 7 உண்டியல்கள் இந்து சமய அறநிலையத் துறையினா் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை உதவிஆணையா் சண்முகசுந்தரம், ஆய்வா் ராகவேந்தா், செயல் அலுவலா் (பொ) சிலம்பரசன், அறங்காவல் குழு உறுப்பினா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.
இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.10 லட்சத்து 73 ஆயிரத்து 814-யை செலுத்தியிருந்தனா். மேலும், 98 கிராம் தங்கமும், 31 கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டிருந்தது.