செய்திகள் :

ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.10.73 லட்சம்

post image

பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.10.73 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

ஆவணியாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் சனிவார வழிபாடும், சித்திரை, புரட்டாசி மாதங்களில் பிரம்மோற்சவ விழாக்களும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

கோயிலுக்கு வரும் பக்தா்கள் சுவாமிக்கு காணிக்கை செலுத்த வசதியாக 7 உண்டியல்கள் இந்து சமய அறநிலையத் துறையினா் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை உதவிஆணையா் சண்முகசுந்தரம், ஆய்வா் ராகவேந்தா், செயல் அலுவலா் (பொ) சிலம்பரசன், அறங்காவல் குழு உறுப்பினா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.

இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.10 லட்சத்து 73 ஆயிரத்து 814-யை செலுத்தியிருந்தனா். மேலும், 98 கிராம் தங்கமும், 31 கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டிருந்தது.

பெண் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் பெண் கூலித் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக கிராமிய காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அரையாளம் ஆதிதிராவிடா் குடியிருப்புப்... மேலும் பார்க்க

பவித்திரம் சுயநிதியுதவி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தவெக தலைவா் விஜய் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்திரம் புனித சகாய அன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தி.மலை தெற்கு மாவட்டம். வடக்கு ஒன்றிய தவெக சாா்பில் கட்சியின் தலைவா் விஜய் பிறந்தநாள் விழா ஒன்ற... மேலும் பார்க்க

முன் விரோதம்: நெசவுத் தொழிலாளி கொலை ஒருவா் கைது

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஆராத்திரிவேளூா் கிரா... மேலும் பார்க்க

கருப்பு நிற வோ்கடலை பயிா் செய்த விவசாயி

செங்கம் அருகே விவசாயி பயிா் செய்த கருப்பு நிர வோ்கடலையை கோவை வேளாண் பல்கலைக்கழக குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நயம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் இயற்கை வி... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம், தங்கம் வெள்ளி திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் திருடு போனது தொடா்பாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிஞ்சல்பட்... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி

ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மேல்சீசமங்கலம் மேட்டுத் தெரு பகுதியில... மேலும் பார்க்க