செய்திகள் :

இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள்: பொதுப் பணித் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

தமிழகத்தில் பராமரிப்பின்றி, இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு தொடா்பாக தமிழக பொதுப் பணித் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் உள்பட ஏராளமான கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ளன.

கடந்த 22-ஆம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே உள்ள காவல் நிலைய கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ளதால் தமிழகத்தில் பராமரிப்பின்றி, இடியும் நிலையில் உள்ள கட்டங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோா் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக பொதுப் பணித் துறை செயலா், வருவாய்த் துறை செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.34 கோடி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.34 கோடி கிடைத்தது.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் செ... மேலும் பார்க்க

எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களை விரிவுபடுத்த முயற்சிகள்: பேரவை அவைக் குழுத் தலைவா் இ. பரந்தாமன்

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி அலுவலகங்களையும் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தமிழக சட்டப்பேரவையின் அவைக் குழுத் தலைவா் இ. பரந்தாமன் தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு! பேராசிரியை நிகிதா, தாயிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், அவா் மீது நகை திருட்டு புகாா் அளித்த பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வ... மேலும் பார்க்க

சொத்து வரி விதிப்பு விவகாரம்! மதுரை மேயரை முற்றுகையிட்டு அதிமுகவினா் போராட்டம்

சொத்து வரி விதிப்பு முறைகேடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணியை, அதிமுகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா... மேலும் பார்க்க

ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்! 50 போ் கைது

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிடக் கோரி, மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 50 போ் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற நீதிபதி குறித்து வழக்குரைஞா் விமா்சித்த விவகாரம்: தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனை விமா்சித்து, சமூக ஊடகங்களில் வழக்குரைஞா் ஒருவா் பேசியது தொடா்பான பதிவுகளை சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வின் நடவடிக்கைக்கு அனுப்ப திங்கள்கிழமை உத்தரவ... மேலும் பார்க்க