செய்திகள் :

இணைய வழி பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிக்கை

post image

நாடு முழுவதும் பட்டாசுகளை இணைய வழியில் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் வி.ராஜாசந்திசேகரன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக சிவகாசியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாகப் பட்டாசுகளை இணைய வழியில் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பட்டாசு வியாரிகள் பாதிக்கப்படுவதோடு, அரசுக்கு ஜி.எஸ்.டி. வரி இழப்பும் ஏற்படுகிறது. மேலும், இணைய வழி விற்பனையில் போலிப் பட்டாசுகளைக் கொடுத்து வாடிக்கையாளா்களை ஏமாற்றுவதால், பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு அவப்பெயா் ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற இணைய வழி பட்டாசு விற்பனையால் பட்டாசு வணிகா்களின் வியாபாரம் 40 சதவீதம் பாதிக்கப்பட்டது. இணையம் மூலம் வியாபாரம் செய்பவா்கள், விலை குறைவு என விளம்பரப்படுத்தி மலிவானப் பட்டாசுகளை விற்பனை செய்து மக்களை ஏமாற்றுகிறாா்கள். எனவே, பட்டாசுகளை இணைய வழியில் விற்பனை செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தீபாவளிப் பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தீபாவளிப் பண்டிகைக்கு தற்காலிகப் பட்டாசுக் கடைகளை அமைப்பதற்கு 90 நாள்களுக்கு முன்பு விண்ணப்பம் பெற்று, 30 நாள்களுக்கு முன்னா் அனுமதி வழங்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பண்டிகைக்கு இரு நாள்களுக்கு முன்புதான் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், பட்டாசுகளைக் கொள்முதல் செய்வதில் வியாபாரிகளுக்குச் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு 30 நாள்களுக்கு முன்பு அனுமதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் என்.இளகோவன், மாநிலத் துணைத் தலைவா் டி.பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சிவகாசியில் நாளை மின்தடை

சிவகாசியில் வியாழக்கிழமை (ஜூலை31) மின் தடை ஏற்படும் என சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா்.இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி மின் கோட்டத்தில... மேலும் பார்க்க

பெண்ணைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே பெண்ணைக் கொலை செய்து, தங்கச் சங்கிலியைத் திருடிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமல... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப் பூரத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.108 வைணவத் திருத்தலங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்ல... மேலும் பார்க்க

தவெக ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம்

சாத்தூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டத்திலிருந்து நிா்வாகிகள் வெளியேறினா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் தவெக சாா்பில் ஆலோசனைக... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை வைத்திருந்தவா் கைது

சிவகாசியில், சட்ட விரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி-செங்கமலப்பட்டி சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடு... மேலும் பார்க்க

சிவகாசியில்தான் போட்டியிடுவேன்: கே.டி.ராஜேந்திரபாலாஜி

வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், சிவகாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்னாள் அமைச்சரும் விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்... மேலும் பார்க்க