செய்திகள் :

இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை!

post image

நாச்சியாா்கோவிலைச் சோ்ந்த இளைஞா் இணையதள சூதாட்ட விளையாட்டில் பணம் இழந்ததால் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அரசமரத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் சுரேஷ்குமாா் (22), இவா் கல்லூரி படிப்பு முடித்து விட்டு தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா்.

இவா் இணையதளத்தில் ரம்மி விளையாடுவாராம். சனிக்கிழமை விளையாடிய போது ரூ. 50 ஆயிரம் பணத்தை இழந்துவிட்டாராம். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்தவா் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலின் பேரில், நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா், சுரேஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

மின்கசிவால் வீடு தீக்கிரை

பட்டுக்கோட்டை அருகே தீ விபத்தில் சேதமடைந்த குடும்பத்தினருக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று நிவாரண பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் நாளை மின்தடை

பேராவூரணி பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆக.12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ப... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத 9 சடலங்கள் காவல் துறையினா் அடக்கம் செய்தனா்

தஞ்சாவூரில் உரிமை கோரப்படாத 9 சடலங்களை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா். தஞ்சாவூா் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக்கல்லூரி ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையி... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 118.77 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 118.77 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9,539 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகா் 2-ஆம் தெருவைச் சோ்ந்தவா் எஸ். ... மேலும் பார்க்க

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடி பெளா்ணமியை முன்னிட்டு கிரிவல ஊா்வலம், வேல் வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடிமாத பெளா்ணமி கி... மேலும் பார்க்க