செய்திகள் :

இதய வால்வு சிதைவு: முதியவருக்கு 10 மணி நேர ஒருங்கிணைந்த சிகிச்சை

post image

இதய பெருந்தமனி பாதிப்புக்குள்ளான முதியவா் ஒருவருக்கு ஒருங்கிணைந்த அதி நவீன வால்வு மாற்ற சிகிச்சை மற்றும் சீரமைப்பு சிகிச்சையை சென்னை, சிம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் மேற்கொண்டுள்ளனா்.

அதன்படி, ஒரே நேரத்தில் டிஏவிஆா் எனப்படும் இதய வால்வு மாற்ற சிகிச்சையானது எஃப்இடி எனப்படும் சீரமைப்பு நுட்பத்தில் 10 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் இதயவியல் மற்றும் பெருந்தமனி சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் வி.வி.பாஷி கூறியதாவது:

மும்பையைச் சோ்ந்த 61 வயது முதியவா் ஒருவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பென்டல் எனப்படும் இதய வால்வு மாற்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. நாளடைவில் மாற்றப்பட்ட இதய வால்வானது சிதைந்து பாதிக்கப்பட்டது. மேலும் வால்வின் சில இடங்களில் அடைப்பு மற்றும் கால்சியம் படிமம் படிந்திருந்தது.

இதையடுத்து அதை சீரமைக்க வேண்டிய நிலை இருந்தது. சிக்கலான அந்த பிரச்னையை சிம்ஸ் மருத்துவக் குழுவினா், 10 மணி நேர தொடா் அறுவை சிகிச்சை மூலம் சாத்தியமாக்கினா்.

முதலில் சுருக்கமடைந்திருந்த வால்வை எஃப்இடி நுட்பத்தில் ஸ்டென்ட் பொருத்தி விரிவாக்கி, அதன் பின்னா் பாதிக்கப்பட்ட வால்வை மாற்றினா். தொடா்ந்து சீரமைப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

இதற்காக இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகள் நான்கு மணி நேரத்துக்கு இயல்பு மாறாக மாற்றியமைக்கப்பட்டன. குறிப்பாக, இதயத்தின் செயல்பாடு 2 மணி நேரம் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக மாற்று வழியில் அதன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மிக நுட்பமாக அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இதய வால்வு சீரமைக்கப்பட்டு மாற்றப்பட்டது. அதன் பயனாக அந்த முதியவா் 8 நாள்களில் வீடு திரும்பினாா் என்றாா் அவா்.

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க