செய்திகள் :

இந்திய அரசின் விவகாரங்கள் முடிவெடுக்கப்படுவது தில்லியிலா? வாஷிங்டனிலா? - ப.சிதம்பரம்

post image

இந்திய அரசின் கொள்கைகள் வகுக்கப்படுவது தில்லியிலா?வாஷிங்டனிலா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானுடனான சண்டையில் நமது ராணுவ வீரர்களின் துணிச்சலையும் சேவையையும் போற்றும் விதமாகவும், நம் வீரர்கள் நாட்டிற்கு ஆற்றிய மகத்தான சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று(மே 25) மாலை நடைபெற்றது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இதில் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் பேசிய அவர், "நம்முடைய ராணுவ வீரர்களைப் பற்றி விஞ்ஞானிகளைப் பற்றி நினைக்கும்போது நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். அதேநேரத்தில் அரசின் நிலைப்பாடு கவலையளிக்கிறது. அரசின் மௌனம் நமக்கு மிகவும் கவலையளிக்கிறது.

இந்திய அரசின் கொள்கைகளை வகுப்பது, முடிவெடுப்பது தில்லியிலா, வாஷிங்டனிலா என்று கேள்வி எழுகிறது. பிரதமர் பேசுவதற்கு மாறாக, ராணுவ அமைச்சர் பேசுவதற்கு மாறாக, வெளியுறவு அமைச்சர் பேசுவதற்கு மாறாக அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் பேசுகிறார்கள். இதெல்லாம் கவலை அளிக்கிறது.

ராணுவத்திற்கு சல்யூட் போடும் அதேநேரத்தில் இந்த கேள்விகளை எழுப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நாடாளுமன்றத்திலோ அல்லது செய்தியாளர் சந்திப்பிலோ வந்து, 'நான் போர் தொடுத்தேன், அவர்கள் தாக்கினார்கள், கடுமையான பதில் தாக்குதல் நடந்தது, வெற்றி பெற்றுவிட்டோம், பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டோம். ஆனால் நான் போரை விரும்பவில்லை, அதனால் தன்னிச்சையாக இந்திய மக்களின் நலன் கருதி போரை நிறுத்துகிறேன்' என்று பிரதமர் சொல்லியிருந்தால் அவருக்கும் சல்யூட் அடித்திருக்கலாம். ஆனால் அவர் சொல்லவில்லை. போரை நிறுத்தினேன் என்று இந்திரா காந்தி போன்று சொல்லியிருந்தால் பெருமைப்பட்டிருக்கலாம். போரை நிறுத்தியவர் அமெரிக்க அதிபர். அதுதான் எங்களுக்கு கவலையளிக்கிறது" என்று பேசியுள்ளார்.

’நேற்று முளைத்த காளான்’: விஜய்யை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு!

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்... மேலும் பார்க்க

75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. துணை முதல்வா் உதயநிதியின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை: கமல்ஹாசன்

கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒதுக... மேலும் பார்க்க

சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் முலம் மாநிலம் முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் து... மேலும் பார்க்க