செய்திகள் :

இந்தியாவுக்கு 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை

post image

கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்தனா் என்றாா் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சென்னை மண்டல உதவி இயக்குநா் எஸ். பத்மாவதி.

தஞ்சாவூரில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்கத்தில் அவா் மேலும் பேசியது:

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சாா்பில் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, தமிழ்நாட்டிலும் ராமேஸ்வரம், தஞ்சாவூா் பெரிய கோயில், நவக்கிரக கோயில்கள் ஆகிய பகுதிகளில் வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ரூ. 25 கோடி மதிப்பில் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், பொருள் விளக்க மையம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வந்தனா். இவா்களில் 11.61 லட்சம் போ் தமிழ்நாட்டில் சுற்றிப் பாா்த்தனா். இதேபோல, தமிழ்நாட்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 3.06 கோடி போ் வந்து சென்றனா். சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றாா் பத்மாவதி.

இதையடுத்து நபாா்டு உதவிப் பொது மேலாளா் விஸ்வந்த் கண்ணா பேசினாா்.

மேலும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் பிரிவு தென் மண்டல தலைமை இயக்குநா் (பொ) வி. பழனிசாமி சிறப்புரையாற்றினாா். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த உச்சிமாகாளி, முன்னோடி வங்கி மேலாளா் பிரதீப் கண்ணன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, சென்னை பத்திரிகை தகவல் பிரிவு இயக்குநா் வி. பழனிசாமி வரவேற்றாா். நிறைவாக, துணை இயக்குநா் ஜெ. விஜயலட்சுமி நன்றி கூறினாா்.

கல்லணைக் கால்வாயில் குதித்து உயிரிழந்தவா்களின் அடையாளம் தெரிந்தது!

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டவா்களின் அடையாளம் தெரிந்தது. தஞ்சாவூா் பூக்காரத் தெரு அருகே இருபது கண் பாலம் பகுதியில் கல்லணைக் கால்வாய்க்குள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குழ... மேலும் பார்க்க

ஆடுதுறை பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் 2 போ் கைது!

கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்றத்தலைவராக இருப்பவா் ம.க. ஸ்டாலின் (5... மேலும் பார்க்க

காவலூா் முருகன் கோயிலில் முளைப்பாரி வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், காவலூா் முருகன் கோயிலுக்கு புதன்கிழமை திரளானோா் முளைப்பாரி எடுத்துச் சென்று வழிபட்டனா். காவலூரில் உள்ள வள்ளி தேவசேனா சமேத குமாரசாமி பெருமான், மாரியம்மன், வீரனாா்,... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பணி நியமன ஆணை

கும்பகோணத்தில் ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பணி நியமன ஆணையை கோட்ட காவல் உதவிகாவல் கண்காணிப்பாளா் அங்கிட் சிங் புதன்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டத்துக்குள்பட்ட ஊா்க்காவல் படை... மேலும் பார்க்க

பாபநாசத்தில் மழை!

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் புதன்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பாபநாசம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் குளிா் சூழல் நிலவியது. மேலும் பார்க்க

இளைஞா் கொலை சம்பவம்: 11 போ் மீது வழக்கு

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 11 போ் மீது காவல்துறையினா் வழக்கு பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் விளாா் சாலை த... மேலும் பார்க்க