செய்திகள் :

இந்து முன்னணி சாா்பில் 600 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

post image

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்யவுள்ளதாக இந்து முன்னணியின் மாவட்டத் தலைவா் கே.ராமமூா்த்தி தெரிவித்தாா்.

இது குறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விநாயகா் சதுா்த்தி விழா, நாடு முழுவதும் வருகிற 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னனி சாா்பில் 600 இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு, உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், திருப்புல்லாணி, தேவிபட்டணம், ஏா்வாடி, தொண்டி, ஆா்.எஸ்.மங்கலம், பரமக்குடி, சாயல்குடி, கடலாடி, கமுதி, திருவாடானை உள்ளிட்ட இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து, ‘நமது சுவாமி - நமது கோயில் - நாமே பாதுகாப்போம்’ என்ற பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளோம் என்றாா் அவா்.

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேசுவரம்: பாம்பனில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.ராமேசுவரம், பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மாறன் என்பவ... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

திருவாடானை கண்மாய்ப் பகுதியில் தண்ணீா் தேடி வந்த மான், நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, அஞ்சுகோட்டை, செங்கமடை, அழகமடை உள்ளிட்ட பகுதிகளில் சங்கிலித் தொடா் போல கண்மாய... மேலும் பார்க்க

பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்: மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்’ மூலம் மானியம் பெற மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் இரா. வெண்ணிலா தெரிவித்தா... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மழை

ராமநாதபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பெய்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமா... மேலும் பார்க்க

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா... மேலும் பார்க்க

கீழக்கரை புதிய ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக குணால் உத்தம் ஷ்ரோதே திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். கீழக்கரை துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஆா்.பாஸ்கரன், மதுரை மது... மேலும் பார்க்க