செய்திகள் :

இன்னும் நிறைய ஓய்வு அறிவிப்புகள் வரலாம்; நிக்கோலஸ் பூரன் ஓய்வுக்குப் பின் டேரன் சம்மி கருத்து!

post image

சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் பல ஓய்வு அறிவிப்புகள் வரலாம் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சம்மி தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தித் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஜூன் 10) அறிவித்தார். ஓய்வு முடிவை அறிவித்த அடுத்த நாளே (ஜூன் 11) அவர் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் நியூயார்க் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

டேரன் சம்மி கூறுவதென்ன?

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நிக்கோலஸ் பூரன் திடீரென அறிவித்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் பல ஓய்வு அறிவிப்புகள் வரலாம் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகெங்கிலும் டி20 லீக் தொடர்கள் அதிகரித்துவிட்டதால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வீரர்கள் ஓய்வு பெறுவது போன்ற விஷயங்கள் நடைபெறும் என என்னுடைய உள்ளுணர்வு கூறியது. நிக்கோலஸ் பூரன் போன்ற திறமையான வீரர் ஒருவர் அணியில் இருப்பதை விரும்புகிறேன். ஆனால், என்னால் யாருடைய முடிவுகளையும் கட்டுப்படுத்த முடியாது. அவருடைய எதிர்கால பயணம் சிறப்பாக இருக்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டி20 உலகக் கோப்பை இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக நிக்கோலஸ் பூரன் அவரது ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார். அதனால், டி20 உலகக் கோப்பைக்கு அவர் இல்லாமல் மேற்கிந்தியத் தீவுகள் எப்படி தயாராகப் போகிறது என்பதை திட்டமிட எங்களுக்கு நேரம் இருக்கிறது. சர்வதேசப் போட்டிகளில் இதுபோன்ற ஓய்வு அறிவிப்புகள் தொடரும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். தற்போது, உலகெங்கிலும் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் அந்த அளவுக்கு பிரபலமாக உள்ளன.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

கிளாசன், டி காக் போன்ற வீரர்களின் ஓய்வு முடிவு குறித்து அனைவரும் பேசுவதை பார்க்க முடிகிறது. இந்த முடிவுகள் எதுவுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. வீரர்கள் ஓய்வு பெறுவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. எந்த ஒரு வீரரையும் ஓய்வு பெறாதீர்கள் என கட்டாயப்படுத்த முடியாது என்றார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடி... மேலும் பார்க்க

பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போ... மேலும் பார்க்க

2-ஆம் நாள் உணவு இடைவேளை: பெடிங்ஹாமின் நிதான ஆட்டத்தால் தெ.ஆ. எழுச்சி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் சேர்ந்து லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய ஏபிடி வில்லியர்ஸ்..!

ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய விடியோ வைரலாகியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள்... மேலும் பார்க்க

ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன். நான் என்ன பைத்தியக்காரனா?” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வெ... மேலும் பார்க்க

டபிள்யூடிசி: முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேசியுள்ளார். டபிள்யூடிசி இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212-க்கு ஆல... மேலும் பார்க்க