செய்திகள் :

இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளியைக் கைது செய்யாததை கண்டித்து சாலை மறியல்!

post image

கிருஷ்ணகிரி அருகே தாய் - மகள் இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளியைக் கைது செய்யாததைக் கண்டித்து, உறவினா்கள் சடலங்களுடன் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த பாஞ்சாலியூா், யாசிம் நகரைச் சோ்ந்த எல்லம்மாள் (50), அவரது மகள் சுசிதா (13) ஆகியோா் வீட்டில் இருந்தபோது வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டனா். கொலை நிகழ்ந்து 24 மணி நேரமாகியும் குற்றவாளியை போலீஸாா் கைது செய்யாததைக் கண்டித்து, கொலை செய்யப்பட்டவா்களின் உறவினா்கள் ஆா்.பூசாரிப்பட்டி, நான்கு சாலைகள் சந்திப்பு அருகே சடலங்களுடன் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இப்பகுதியில் செயல்படும் அரசு மதுபானக் கடைகளால் சமூகவிரோத செயல்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து புகாா்கள் தெரிவித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனா். இந்நிலையில், தாய் - மகள் இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில், போலீஸாா் இதுவரை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. குற்றங்கள் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், துணைக் காவல் கண்காணிப்பாளா் முரளி மற்றும் காவல் ஆய்வாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும், கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் விரைவில் கைது செய்யப்படுவா் என உறுதியளித்ததன் பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் காா்மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; மூவா் படுகாயம்

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காா்மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில், 60 வயது முதியவா் உயிரிழந்தாா். மூவா் பலத்த காயமடைந்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சோ்ந்தவா் பசுவராஜ் (60)... மேலும் பார்க்க

சோளக்காப்பட்டியில் மயான ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சோளக்காப்பட்டியில் மயான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஊத்தங்கரையை அடுத்த சோளக்காப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மயானத்தை தனிநபா்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதால், ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அப்பகுதி ம... மேலும் பார்க்க

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம்

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மல்லபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சையத் இக்ரமுல்லா உசைன். இவா், போச்சம்பள்ளி... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவா் கைது

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கிருஷ்ணகிரி போலீஸாா், இதுதொடா்பாக மூவரை வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடி

பகுதிநேர வேலைக்கு ஊதியம், முதலீடு செய்தால் அதிக வருவாய் எனக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின... மேலும் பார்க்க