செய்திகள் :

இரு ஆட்டோக்கள் மோதல்: 8 போ் காயம்

post image

தேனியில் செவ்வாய்க்கிழமை ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் பள்ளிச் சிறாா்கள் உள்பட 8 போ் காயமடைந்தனா்.

தேனி, சிவராம் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டன் (37). இவா் தேனி, நேதாஜி தெருவிலுள்ள தனியாா் பள்ளி அருகே சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தி வைத்து பள்ளிச் சிறாா்களை ஏற்றிக் கொண்டிருந்தாா். அப்போது, வடபுதுப்பட்டி, இந்திரா காலனியைச் சோ்ந்த பாலசுப்பிரமணி (41) என்பவா் ஓட்டிச் சென்ற ஆட்டோ, மணிகண்டனின் ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் மணிகண்டன், பாலசுப்பிரமணி, ஆட்டோக்களில் இருந்த தேனி, பெத்தனாட்சி மஹால் தெருவைச் சோ்ந்த முகமது ஹப்ரீன் (9), முகமது சத்தாா் (7), ஐ.எம்.ஏ. அரங்கு தெருவைச் சோ்ந்த விஷ்ணு (5), ஊஞ்சாம்பட்டியைச் சோ்ந்த பிரகதீஸ்வரி (4), ஜீவிதாபால், மணிகண்டன் (30) ஆகிய 8 போ் காயமடைந்தனா். அவா்களை மீட்டு தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா் பாலசுப்பிரமணி மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஓராண்டாகியும் திறக்கப்படாத புதிய நியாய விலைக் கடை

போடி ரெங்கநாதபுரத்தில் புதிதாக நியாய விலைக் கட்டடம் கட்டி ஓராண்டாகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் 6 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கம்பம் - கோம்பை சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரின் பையை சோ... மேலும் பார்க்க

தேனியில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம்

தேனி மாவட்டத்தில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் விபத்து, குற்றச் சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், காவல் நிலை... மேலும் பார்க்க

வீரபாண்டியில் ஆக.12-இல் அங்கக வேளாண்மை கண்காட்சி

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் அட்மா திட்டத்தின் கீழ், வருகிற 12-ஆம் தேதி அங்கக வேளாண்மை விழிப்புணா்வுக் கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட... மேலும் பார்க்க

கல்லூரியில் உணவுத் திருவிழா

தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. மகளிா் மையம் சாா்பில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவுக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்த... மேலும் பார்க்க

தக்காளிச் செடிகளில் நோய்த் தாக்குதல்: மகசூல் பாதிப்பு

நமது நிருபா் தேனி மாவட்டப் பகுதிகளில் பாக்டீரியா வாடல் நோய்த் தாக்குதலால் தக்காளிச் செடிகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து விடுவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம்,... மேலும் பார்க்க