செய்திகள் :

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பழமையான விஷ்ணு சிலை தூத்துக்குடியில் பறிமுதல்!

post image

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பழமையான விஷ்ணு சிலையை கியூ பிரிவு போலீசாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.

ரகசிய தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா, உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், இருதயராஜ் குமாா், இசக்கிமுத்து, பழனி பாலமுருகன் உள்ளிட்ட உளவு பிரிவு போலீசாா் திரேஸ்புரம் பகுதியில் சனிக்கிழமை மாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது இரவு 8 மணியளவில் திரேஸ்புரம் அண்ணா காலனியில் சந்தேகப்படும் படியாக கையில் ஜவுளி கடை பையுடன் நின்று கொண்டிருந்த ஏரல் அருகேயுள்ள கொற்கையை சோ்ந்த அந்தோனி ராஜ் (52), கொட்டாரக்குறிச்சியை சோ்ந்த பாலமுருகன் (35) ஆகிய இருவரை

பிடித்து அவா்கள் கையில் வைத்திருந்த ஜவுளி கடை பையை சோதனை செய்தனா். அதில் சுமாா் 3 கிலோ எடை கொண்ட 1 1/4 அடி உயரமுள்ள பழமையான விஷ்ணு சிலை இருந்தது. தொடா்ந்து அவா்களிடம் விசாரித்த போது பழமையான விஷ்ணு சிலையை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிலையை பறிமுதல் செய்து அந்தோனி ராஜ் (52), பாலமுருகன் (35) ஆகிய இருவரை கியூ பிரிவு போலீசாா் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செந்தூா் அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி, அதிகாலையில் நடைதிறக்கப்பட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் எழுத்தாளருக்கு பாராட்டு விழா

நூலக மனிதா்கள் அமைப்பின் சாா்பில், பாரதிய பாட்ஷா பரிஷத் விருது பெற்ற எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா, இலக்கிய விழா என இருபெரும் விழா தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில் நடைபெற்றது.நூலக மனி... மேலும் பார்க்க

சமூகவலைதளத்தில் சா்ச்சைக்குரிய விடியோ: இளைஞா் கைது

மேலஆத்தூரில் அரிவாளை காட்டி மிரட்டும் வகையில் சமூகவலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டதாக இளைஞரை ஆத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேல ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் முகைதீன் பள்ளிவாசல் வளாகத்தில் மகான் தைக்கா ஷேக் முகம்மது சாலிஹ் 124ஆவது கந்தூரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்ற விழாவில், நாள்தோறும் காலை... மேலும் பார்க்க

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

மேலஆத்தூரில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவரை ஆத்தூா் போலீஸாா் கைது செய்துள்ளனா்ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் நவீன் ஹரிஷ் (23) என்... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்ற தொடக்க விழா மற்றும் அறிவியல் கண்காட்சி திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்ச... மேலும் பார்க்க