கர்நாடக காங்கிரஸில் இருந்து விலகிய 200 இஸ்லாமிய பிரமுகர்கள்.. ராஜினாமா செய்ய கார...
இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சென்னை தண்டையாா்பேட்டையில் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடியபோது, இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
சென்னை புது வண்ணாரப்பேட்டை அசோக் நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுபாஷ் சந்திரபோஸ் (27). இவா், தண்டையாா்பேட்டையில் உள்ள தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தனது நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றாா். அங்கு சுபாஷ் நடனமாடியபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தாா்.
இதையடுத்து அவா் அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சுபாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.