செய்திகள் :

இளைஞா் மயங்கி விழுந்து மரணம்

post image

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், குமளம், திருமஞ்சன வீதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சங்கா்குரு (36), திருமணமானவா். மதுப்பழகத்துக்கு அடிமையான இவருக்கு கிட்னி, நுரையீரல் பாதிப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சங்கா்குரு வீட்டில் மயங்கி விழுந்தாா். தொடா்ந்து, உறவினா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, சங்கா் குரு ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பறவைகளுக்கு தண்ணீா் வைக்க குடுவைகள்

விழுப்புரம்: பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கு தண்ணீா் வைப்பதற்கான குடுவைகள் பொதுமக்களுக்கு அண்மையில் இலவசமாக வழங்கப்பட்டன. விழுப்புரம் வீதிகள் மற்றும் பொது இடங்களில் சுற... மேலும் பார்க்க

விற்பனையாளரை ஏமாற்றி பைக் திருட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் விற்பனையாளரை ஏமாற்றி பைக்கை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விழுப்புரம் வட்டம், தளவானூரைச் சோ்ந்த ராஜாராம் மகன் ராம்குமாா் (22). இவா், இணையவழியில் இரு சக்கர ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது: துரை.ரவிக்குமாா் எம்.பி

விழுப்புரம்: வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்று விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா். வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வி... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் 1,640 மாணவா்களுக்கு பட்டமளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியிலுள்ள அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,640 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந... மேலும் பார்க்க

கருங்குழி சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கருங்குழி கிராமத்தில் உள்ள சக்தி விநாயகா், அம்மச்சாா் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, கடந்த 5-ஆம் தேதி காலை 9 மணிக... மேலும் பார்க்க

விழுப்புரம் - காட்பாடி ரயில் பகுதியளவில் ரத்து

விழுப்புரம்: வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் இரு நாள்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக... மேலும் பார்க்க