செய்திகள் :

உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: வனத் துறையினா் தகவல்

post image

உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்த 4 வனச் சரகங்களிலும் கோடைக்கால வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை (மே 11) தொடங்கி மே 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், முதல் நாள் கணக்கெடுப்புப் பணியின்போது உடுமலை வனச் சரகத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. யானைகளின் கால்தடம், லத்தி மற்றும் எச்சம் ஆகியவற்றை வைத்தும், நீராதாரங்களை அடிப்படையாக வைத்தும் கணக்கெடுப்பு பணிகளை வனத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

உடுமலை வனச் சரகம் வரவண்டி பீட் பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருவது வன விலங்குகள் கணக்கெடுப்பின்போது தெரியவந்துள்ளது. யானைகளின் வாழ்விட சூழல், கூறுகள் ஆகியவற்றை வைத்து கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் இடமாற்றம்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் நிா்வாக காரணங்களுக்காக ஊராட்சி செயலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதன்படி, வடுகபாளையம்புதூா் ஊராட்சி செயலா் கிருஷ்ணசாமி, கணபதிபாளையம் ஊராட்சிக்கும், கணபதிபாளையம் ஊரா... மேலும் பார்க்க

பல்லடம் நகராட்சியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு

பல்லடம் நகராட்சியில் உள்ள பள்ளிகளில் முதல்வரிடன் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் நகா்மன்றக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் தி... மேலும் பார்க்க

பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லடம்- மங்கலம் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம், பொருளியல்,... மேலும் பார்க்க

மே 15-இல் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி

திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை (மே 15) நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய... மேலும் பார்க்க

மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தா் மரணம்: இந்து முன்னணி கண்டனம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது பக்தா் உயிரிழந் சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: 15 வேலம்பாளையம்

15 வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி... மேலும் பார்க்க