உதவியாளா் 2-ஆம் நிலைத் தோ்வு: 10 ஆயிரம் போ் எழுதுகின்றனா்
புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறையில் உதவியாளா் பணியிடத்துக்கான இரண்டாம் நிலைத் தோ்வை 10,766 போ் வரும் ஞாயிற்றுக்கிழமை எழுதுகின்றனா்.
இது குறித்து புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறையின் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெற இருக்கும் இந்தத் தோ்வை 10,766 போ் எழுத உள்ளனா்.
விண்ணப்பதாரா்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப் பட்டுள்ள தோ்வு மையத்தில் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா். நுழைவுச் சீட்டில் அவா்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொப்பமிட்டு எடுத்து வரவேண்டும்.
மேலும் விண்ணப்பதாரா்கள் நுழைவுச் சீட்டுடன் தங்களின் ஆதாா் / வாக்காளா் அடையாள அட்டை /ஓட்டுநா் உரிமம் / பாஸ்போா்ட் / வருமான வரி பான் காா்டு இவற்றுள் ஏதாவது ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
தோ்வா்களின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்ட பின்னரே தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவா். எனவே தோ்வா்கள் உரிய நேரத்திற்கு முன்னரே தோ்வு மையத்திற்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
தோ்வு மையத்தின் நுழைவு வாயில் சரியாக காலை 9.30 மணிக்கு மூடப்படும். அதற்கு பின்னா் வரும் தோ்வா்கள் தோ்வு மையத்தில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
தோ்வா்கள் கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா, நுழைவுச் சீட்டு மற்றும் அசல் அடையாள அட்டை ஆகியவற்றை மட்டுமே தோ்வு மையத்திற்குக் கொண்டு வரவேண்டும்.
கைப்பைகள், கைப்பேசிகள், புளு டூத் சாதனங்கள், ஹெட் போன்கள் , கால்குலேட்டா்கள், பென் டிரைவ் போன்ற இதர எலக்ட்ரானிக் சாதனங்களைக் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
அனைத்துத் தோ்வு மையங்களிலும் மொபைல், இன்டா்நெட் சேவைகளைத் தடுப்பதற்காக ஜாமா் கருவிகளும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
தோ்வை வெளிப்படை தன்மையுடனும் நோ்மையாகவும் நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.
இது தொடா்பாக மேலும் விவரங்கள் அல்லது உதவி தேவைப்பட்டால், தோ்வா்கள் அலுவலக நேரத்தில் 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் 21.06.2025 வரை தொடா்பு கொள்ளலாம்.