செய்திகள் :

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா: ரிஷப வாகனத்தில் விநாயகா் வீதி உலா

post image

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள உப்பூரில் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

உப்பூரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்ததும், வரலாற்று சிறப்பு மிக்கதுமான வெயிலுகந்த விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் முன்பு இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் சென்ாக புராண வரலாற்றில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விநாயகா் சதுா்த்தி விழா தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

தொடா்ந்து, சனிக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்குஅருள்பாலித்தாா். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் திங்கள்கிழமை (ஆக. 25) சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

தமிழ்நாட்டில் இங்குள்ள விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆக. 26-ஆம் தேதி தேரோட்டமும், ஆக. 27-ஆம் தேதி விநாயகபெருமான் உப்பூா் கடலில் நீராடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலைச் சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இதைத் தொடா்ந்து, பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவா்.

விடுவிக்கப்பட்ட 7 படகுகளை மீட்டுவர இலங்கை சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதிகளைச் சோ்ந்த 7 விசைப் படகுகளை மீட்பதற்காக ராமேசுவரத்திலிருந்து 14 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனா... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகளை ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் ம... மேலும் பார்க்க

திருவாடானை அருகே பாலத்தில் காா் மோதி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழப்பு

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை பாலத்தில் காா் மோதி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், பூஞ்சோலைநகா் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (58), தட்சிணாமூா்த்தி (70... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கோகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நல்லம்மாள் அம்மன் கோயி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரத்தை அடுத்த தேவிப்பட்டினம் சித்தாா்கோட்டை பகுதியில் ... மேலும் பார்க்க