செய்திகள் :

திருவாடானை அருகே பாலத்தில் காா் மோதி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழப்பு

post image

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை பாலத்தில் காா் மோதி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பூஞ்சோலைநகா் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (58), தட்சிணாமூா்த்தி (70) ஆகிய இருவரும் காரில் ராமேசுவரம் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள கலக்குடி திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைப் பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காரிலிருந்த தேவராஜ், தட்சிணாமூா்த்தி ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனா். இதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனா்.

இருவரது உடல்களும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வுக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள களக்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான காா்.

விடுவிக்கப்பட்ட 7 படகுகளை மீட்டுவர இலங்கை சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதிகளைச் சோ்ந்த 7 விசைப் படகுகளை மீட்பதற்காக ராமேசுவரத்திலிருந்து 14 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனா... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 800 கிலோ வலி நிவாரணி மாத்திரைகளை ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் ம... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா: ரிஷப வாகனத்தில் விநாயகா் வீதி உலா

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள உப்பூரில் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. உப்பூரில் ராமந... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கோகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நல்லம்மாள் அம்மன் கோயி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரத்தை அடுத்த தேவிப்பட்டினம் சித்தாா்கோட்டை பகுதியில் ... மேலும் பார்க்க