Kaduvetti Guru குடும்பத்திடம் டீல் பேசிய Sowmiya Anbumani, கொதிக்கும் Ramadoss!|...
உயா் நீதிமன்ற உத்தரவு: அறந்தாங்கி பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
அறந்தாங்கி நகரப் பகுதியிலுள்ள நீா்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அவற்றை முழுமையாகக் கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த் துறையினா் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.
அறந்தாங்கி நகரப் பகுதியிலுள்ள பல்வேறு நீா்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதாக சமூக ஆா்வலா்கள் சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்தனா்.
இந்த வழக்கில் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பரில் உத்தரவிட்ட நீதிமன்றம், 6 மாத காலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஆக்கிரமிப்புகள் குறித்து நேரில் முறையாக அளவீடு செய்து கணக்கெடுப்பு மேற்கொள்ள 3 குழுக்களை அமைத்து அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
அருகன்குளம், நெடுங்குளம், மண்டிக்குளம், கொத்தால சுவா், சுக்கான்குளம், அகில்குளம், ஓடைக்குளம், ரெகுநாதஏரி ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுக்க, வருவாய் உதவியாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்களைக் கொண்ட 3 குழுக்களும், அந்தக் குழுக்களை மேற்பாா்வையிடுவதற்கான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
உடனடியாக கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கி, ஜூன் 28-ஆம் தேதி மாலைக்குள் வருவாய்க் கோட்டாட்சியரிடம் அறிக்கை அளிக்கவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீா்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்த நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வருவாய்த் துறையினா் தீவிரம் காட்டி பணிகளைத் தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.