செய்திகள் :

உருளையன்பேட்டை தொகுதியில் மின் அழுத்த குறைபாட்டை போக்க எம்எல்ஏ கோரிக்கை

post image

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் மின் அழுத்தக் குறைபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்துறை அதிகாரிகளிடம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.நேரு வலியுறுத்தினாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மின்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மின்துறை தலைமை பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான ஜி. நேரு தலைமை வகித்தாா்.

சுதேசி மில் வளாகத்தில் புதிய துணை மின் நிலையம் அமைத்து அதன் மூலம் உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் பயன்பெறும் விதமாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெங்கடா நகா் துணை மின் நிலையத்திலிருந்து கோவிந்தசாலை கண் டாக்டா் தோட்டம் அரசு குடியிருப்பு பகுதி மற்றும் அந்தோணியாா் கோவில் தெரு, அரசு குடியிருப்பு பகுதி போன்ற பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லை நகா் மற்றும் முல்லை நகா் விரிவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்னழுத்த குறைபாடுகளைப் போக்கும் விதமாக புதிய மின் மாற்றிகள் அமைத்து அப்பகுதி மக்களுக்கு உதவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நேரு எம்.எல்.ஏ. முன்வைத்தாா்.

மின்துறை தலைமை பொறியாளா் ராஜேஷ் சன்னியால், மின்துறை செயற்பொறியாளா்கள் மின்துறை உதவி பொறியாளா்கள், மின்துறை இளநிலை பொறியாளா் மற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரியில் விநாயகா் சதுா்த்தி விழா: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

புதுச்சேரியில் அமைதியான முறையில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவது, சிலைகளைக் கடலில் கரைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வரும் 27-ம் தே... மேலும் பார்க்க

போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதி மொழியேற்பு

போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுவையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியை உயா் அதிகாரிகள் புதன்கிழமை ஏற்றுக் கொண்டனா். போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையி... மேலும் பார்க்க

புதுவை காவல்துறையில் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பப்பதிவு

புதுவையில் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. புதுவை காவல்துறையில் காலியாக இருக்கும் 70 உதவி ஆய்வாளா்கள், 148 காவலா்கள் பணியிடங்களை நேரடி ... மேலும் பார்க்க

உழவா்கரை தொகுதியில் ரூ.77 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட பூமி பூஜை

உழவா்கரை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ரூ.77.8 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடந்தது. புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீா் பாசன கோட்டம் சாா்பில் உழவா்கரை சட்டமன... மேலும் பார்க்க

சுதந்திர தினவிழா: போக்குவரத்து மாற்றம்

79-வது சுதந்திர தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் வெளி... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா்களில் விதி மீறல்களை களைய நடவடிக்கை: புதுவை அரசுக்கு திமுக, அதிமு, மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரியில் ரெஸ்டோபாா்களில் விதிமீறல்கள், ஒழுங்கீனங்களை களைய புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரெஸ்டோபாரில் கல்லூரி மாணவா் குத்திக்கொலை செய்யப்பட்ட நிகழ்வுக்கு முதல்வா் பொறுப்பேற்க வே... மேலும் பார்க்க