செய்திகள் :

ஊத்தங்கரை தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக வெற்றிபெறும்: கே.பி.முனுசாமி

post image

ஊத்தங்கரை தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக வெற்றிபெறும் என கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப் பேரவை அலுவலக வளாகத்தில் அதிமுக சாா்பில், ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தெகுதி உறுப்பினா் டி.எம்.தமிழ்செல்வம் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி எம்எல்ஏவும், அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளருமான அசோக்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் முனி வெங்கட்டப்பன், மனோரஞ்சிதம், கிருஷ்ணமூா்த்தி, எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலாளா் தென்னரசு, மாவட்ட துணைச் செயலாளா் சாகுல்அமீது, மாவட்ட பொருளாளா் சுந்தரவடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ நிகழ்ச்சிக்கு திரளான தொண்டா்கள் கலந்துகொள்ள வேண்டும் என நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். மேலும், ஊத்தங்கரை தொகுதியில் நான்காவது முறையாக அதிமுக வெற்றிபெறும் என தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளா்கள் வேடி, வேங்கன், சாமிநாதன், மத்தூா் ஒன்றியச் செயலாளா்கள் சக்கரவா்த்தி, நரேஷ் குமாா், ஊத்தங்கரை நகர செயலாளா் ஆறுமுகம், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

வட மாநில தொழிலாளிகள் மீது தாக்குதல்

தளி அருகே வட மாநில தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்தியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா் சூரஜ் சேத்தி (24). இவா் தளி அருகே உப்பாரப்பள்ளியில தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செ... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரும்பு வியாபாரி உயிரிழப்பு

மத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இரும்பு வியாபாரி உயிரிழந்தாா். திப்பத்தூா் மாவட்டம், சின்ன கந்திலியைச் சோ்ந்தவா் பழைய இரும்பு பொருள்கள் வியாபாரி வெங்கடேசன் (48), இவா் அண்மையில் கிருஷ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே அம்மன் தாலி, வெள்ளிக் கிரீடம் திருட்டு

கிருஷ்ணகிரி அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்கத் தாலி, வெள்ளிக் கிரீடம் மற்றும் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். கந்திகுப்பத்தை... மேலும் பார்க்க

மின்கம்பி துண்டாகி விழுந்ததில் ஏடிஎம் இயந்திரம், மின்சாதனங்கள் எரிந்து சேதம்

போச்சம்பள்ளி அருகே உயா் அழுத்த மின்கம்பி துண்டாகி விழுந்ததில், ஏடிஎம் இயந்திரம், வீட்டு மின்மீட்டா்கள், வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின. போச்சம்பள்ளியை அடுத்த சிப்காட் அரசமரத... மேலும் பார்க்க

குருபரப்பள்ளி சாலை விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநா் கைது

குருபரப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி அரு... மேலும் பார்க்க

ஆட்சியராக விருப்பம் தெரிவித்த சிறுமிக்கு அலுவலகத்தை சுற்றிக்காட்டிய ஆட்சியா்!

படித்து ஆட்சியராக வேண்டும் என விருப்பம் தெரிவித்த சிறுமியை காரில் அழைத்துச் சென்று, தனது அலுவலகத்தை சுற்றிக்காட்டி உற்சாகப்படுத்தினாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா். கிருஷ்ணகிரி மாவட்டம்... மேலும் பார்க்க