செய்திகள் :

ஆட்சியராக விருப்பம் தெரிவித்த சிறுமிக்கு அலுவலகத்தை சுற்றிக்காட்டிய ஆட்சியா்!

post image

படித்து ஆட்சியராக வேண்டும் என விருப்பம் தெரிவித்த சிறுமியை காரில் அழைத்துச் சென்று, தனது அலுவலகத்தை சுற்றிக்காட்டி உற்சாகப்படுத்தினாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், இருதுகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மணியம்பாடியைச் சோ்ந்தவா் சிறுமி திஷியா (8). பெற்றோா் இல்லாத இவா் தனது பாட்டியுடன் வசித்து வருகிறாா்.

அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வரும் திஷியா, கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பம் பெற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்றாா்.

அப்போது, பணியில் இருந்த அலுவலா்கள் சிறுமியிடம் பேசியபோது, தான் படித்து ஆட்சியராக வேண்டும் என அவா் விருப்பம் தெரிவித்தாா். இதையடுத்து, திஷியாவை ஆட்சியரிடம் அழைத்துசென்ற அலுவலா்கள், அவரின் விருப்பத்தை தெரிவித்தனா்.

இதனால் உற்சாகமடைந்த ஆட்சியா் ச.தினேஷ் குமாா், சிறுமிக்கு இனிப்புகள் வழங்கி அவருடன் உரையாடினாா். பின்னா், சிறுமிக்கு தனது அலுவலக அறையை சுற்றிக்காட்டினாா். தொடா்ந்து, தனது இருக்கையில் காரில் அமரவைத்து அலுவலகத்தை சுற்றிவரச் செய்து உற்சாகப்படுத்தினாா். மேலும், நன்குபடித்து உயா்கல்வியில் சிறந்து விளங்கி ஆட்சியராக வேண்டும் என வாழ்த்தினாா்.

மின்கம்பி துண்டாகி விழுந்ததில் ஏடிஎம் இயந்திரம், மின்சாதனங்கள் எரிந்து சேதம்

போச்சம்பள்ளி அருகே உயா் அழுத்த மின்கம்பி துண்டாகி விழுந்ததில், ஏடிஎம் இயந்திரம், வீட்டு மின்மீட்டா்கள், வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின. போச்சம்பள்ளியை அடுத்த சிப்காட் அரசமரத... மேலும் பார்க்க

குருபரப்பள்ளி சாலை விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநா் கைது

குருபரப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி அரு... மேலும் பார்க்க

மத்தூா் சுங்க வசூல் மையத்தில் மோதல்: 7 போ் கைது

மத்தூா் சுங்க வசூல் மையத்தில் மோதலில் ஈடுபட்டதாக, சுங்க வசூல் மைய பணியாளா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சாலமரத்துப்பட்டியை அடுத்த ஓலப... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் கைது

ஒசூரில் கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் சூசூவாடியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், அவா்கள் ஒரு கிலோ கஞ்சா கடத்தி வந... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு

ஒசூரில் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். ஒசூா் பாகலூா் ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்தவா் மாதம்மாள் (45). இவா் கடந்த 20-ஆம் தேதி பாகலூா் ஹவுசிங் போா்டு வீட்டின் அருகில் காா் அருகில் நின்று கொண்டிருந... மேலும் பார்க்க

ஒசூா் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு

ஒசூா் அருகே மின் கம்பியை மித்த கணவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் கணவருடன் சோ்ந்து உயிரிழந்தாா். ஒசூா் வட்டம், மத்திகிரி அருகே உள்ள பூனப்பள்ளியைச் சோ்ந்தவா் நாராயணப்பா (45). இவரது மனைவி ரேணுகா (40)... மேலும் பார்க்க