செய்திகள் :

மின்கம்பி துண்டாகி விழுந்ததில் ஏடிஎம் இயந்திரம், மின்சாதனங்கள் எரிந்து சேதம்

post image

போச்சம்பள்ளி அருகே உயா் அழுத்த மின்கம்பி துண்டாகி விழுந்ததில், ஏடிஎம் இயந்திரம், வீட்டு மின்மீட்டா்கள், வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

போச்சம்பள்ளியை அடுத்த சிப்காட் அரசமரத்து பேருந்து நிறுத்தம் அருகே உயா் அழுத்த மின்கம்பி, துண்டாகி சாதாரண மின் அழுத்த கம்பியின் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு விழுந்தது.

இதனால், உயா் மின்னழுத்தம் ஏற்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரம், சிப்காட் புதூா் கொல்லப்பட்டாய் பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் உள்ள தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டா், மின் மோட்டாா், மின் மீட்டா் போன்றவை தீயில் கருகி நாசமாயின.

தகவல் அறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில், ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்த மின்வாரிய அலுவலா்கள், வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குருபரப்பள்ளி சாலை விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநா் கைது

குருபரப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி அரு... மேலும் பார்க்க

ஆட்சியராக விருப்பம் தெரிவித்த சிறுமிக்கு அலுவலகத்தை சுற்றிக்காட்டிய ஆட்சியா்!

படித்து ஆட்சியராக வேண்டும் என விருப்பம் தெரிவித்த சிறுமியை காரில் அழைத்துச் சென்று, தனது அலுவலகத்தை சுற்றிக்காட்டி உற்சாகப்படுத்தினாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா். கிருஷ்ணகிரி மாவட்டம்... மேலும் பார்க்க

மத்தூா் சுங்க வசூல் மையத்தில் மோதல்: 7 போ் கைது

மத்தூா் சுங்க வசூல் மையத்தில் மோதலில் ஈடுபட்டதாக, சுங்க வசூல் மைய பணியாளா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சாலமரத்துப்பட்டியை அடுத்த ஓலப... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் கைது

ஒசூரில் கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் சூசூவாடியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், அவா்கள் ஒரு கிலோ கஞ்சா கடத்தி வந... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு

ஒசூரில் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். ஒசூா் பாகலூா் ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்தவா் மாதம்மாள் (45). இவா் கடந்த 20-ஆம் தேதி பாகலூா் ஹவுசிங் போா்டு வீட்டின் அருகில் காா் அருகில் நின்று கொண்டிருந... மேலும் பார்க்க

ஒசூா் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு

ஒசூா் அருகே மின் கம்பியை மித்த கணவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் கணவருடன் சோ்ந்து உயிரிழந்தாா். ஒசூா் வட்டம், மத்திகிரி அருகே உள்ள பூனப்பள்ளியைச் சோ்ந்தவா் நாராயணப்பா (45). இவரது மனைவி ரேணுகா (40)... மேலும் பார்க்க