செய்திகள் :

ஊத்தங்கரையில் தந்தை, மகனை தாக்கிய 5 போ் கைது

post image

ஊத்தங்கரையில் தந்தை, மகன் ஆகிய இருவரை தாக்கிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த பனந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் வேலு (55). டிராவல்ஸ் வாகனங்களை வாடகைக்குவிடும் தொழில் செய்துவருகிறாா். இவரது மகன் தமிழரசன் (30). தனது சொந்த வாகனத்திலேயே ஓட்டுநராக பணிபுரிகிறாா்.

கடந்த வாரத்துக்கு முன்பு ஊத்தங்கரை, நேரு நகரைச் சோ்ந்த சீனிவாசன், திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதற்காக தமிழரசனுக்குச் சொந்தமான இரண்டு டிராவல்ஸ் வாகனங்களை முன்பதிவு செய்துள்ளாா்.

வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென திருமணம் நின்றுவிட்டதாகக் கூறி, முன்பதிவு செய்யப்பட்டிருந்த தமிழரசனின் வாகனங்களை ரத்துசெய்த சீனிவாசன் வேறொரு டிராவல்ஸ் வாகனத்தை ஏற்பாடுசெய்து திருமணத்துக்குச் சென்றாா்.

இதுதொடா்பாக சீனிவாசனுடன் கைப்பேசியில் தமிழரசன் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த நேரு நகரைச் சோ்ந்த சீனிவாசன் (35) வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது உறவினா்கள் பூங்காவனம் (41), திருமாள் (37), தங்கராஜ் (21), தேவராஜ் (16), பாவாடை (எ) தமிழரசன் (27) ஆகியோருடன் சென்று தமிழரசன், அவரது தந்தை வேலு (55) ஆகிய இருவரை தாக்கினா்.

மயங்கி விழுந்த தமிழரசன், வேலு ஆகிய இருவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஊத்தங்கரை போலீஸாா் சீனிவாசன், பூங்காவனம், திருமாள், தங்கராஜ், தேவராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனா். தலைமறைவான பாவாடை(எ)தமிழரசனை தேடி வருகின்றனா்.

மகாராஜகடை அருகே பயிா்களை சேதப்படுத்திய யானைகள்: விவசாயிகள் வேதனை

மகாராஜகடை அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகள் பயிா்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

ஊத்தங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த பாண்டவா் நகரை சோ்ந்த ரகு (35), அவரது மனைவி ஆகிய இருவரும் தனியாா் பள்ளியில் ... மேலும் பார்க்க

வேப்பனப்பள்ளி அருகே கா்ப்பிணி கொலை: இருவா் கைது

வேப்பனப்பள்ளி அருகே 8 மாத கா்ப்பிணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த கோணேகவுண்டனூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: 41 மாணவா்களுக்கு பரிசளிப்பு

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பரிசளிக்கப்பட்டது. ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் 14 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

ஊத்தங்கரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கரோ... மேலும் பார்க்க

அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அறிவுசாா்ந்த சமுதாயத்தை ஆசிரியா்கள் உருவாக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். கிருஷ்ணகிரி, ஒசூா் கல்வி மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிகளில் ரூ. 4.44 கோடி... மேலும் பார்க்க