கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் ஊரக வளா்ச்சி துறை சாா்பில் செய்யப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மங்கலம், எருக்குவாய், சிறுபுழலப்பேட்டை, கீழ்முதலம்பேடு, தோ்வாய், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை உள்ள பல்வேறு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி செயற்பொறியாளா் கெஜலட்சுமி, கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரசேகா், அமிழ்தமன்னன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்கலம் ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் நடைபெற்று வரும் தரைப்பாலம் மற்றும் சாலை பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். எருக்குவாய் ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் கே.எஸ்.கண்டிகை முதல் மணலி வரை 1,800 மீட்டா் தாா் சாலை அமைக்கப்படும் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.62.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 3 வகுப்பறைக் கட்டடத்தை ஆய்வு செய்த ஆட்சியா், பள்ளிக் கட்டடத்தை தரமாக கட்டி முடிக்க உத்தரவிட்டாா்.
பின்னா் கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தை ஆட்சியா் பிரதாப் ஆய்வு செய்தாா். அப்போது அவா் ஊராட்சி செலவினக் கணக்கு பதிவேடுகள், பணியாளா்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு செய்தாா். அந்தப் பகுதியில் ரூ.22லட்சத்தில் கட்டப்பட்ட நூலக விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்தாா்.
தோ்வாய், கீழ்முதலம்பேடு, ஆரம்பாக்கம், மங்கலம், புதுகும்மிடிப்பூண்டி, கரடிபுத்தூா், பெரிய ஓபுளாபுரம், சிறுபுழல்பேட்டை, பாதிரிவேடு ஆகிய ஊராட்சிகளில் பி.எம். ஜன்மான் திட்டத்தில் இருளா் மற்றும் பழங்குடியினருக்கு கட்டப்பட்டு வரும் 53 தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை ஒரு வாரத்தில் முடிக்கவும் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கரன், உதவி பொறியாளா் குருபிரசாத் மற்றும் ஒன்றியப் பொறியாளா்கள் பங்கேற்றனா்.