செய்திகள் :

ஊராட்சி செயலா் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

post image

வேதாரண்யம் அருகே ஊராட்சி செயலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், உறவினா்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாகக்குடையான் கிராமத்தைச் சோ்ந்தவா் கே.வி. சுப்பிரமணியன்(53). அருகேயுள்ள ஆயக்காரன்புலம்-1 ஆம் சோ்த்தி ஊராட்சி செயலராகப் பணியாற்றி வந்தாா்.

ஊராட்சி நிா்வாகம் சாா்ந்த பிரச்னையில் இவா், கருப்பம்புலம் ஊராட்சிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டதாகவும், கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், புதன்கிழமை மாலை சுப்பிரமணியன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதையடுத்து, சுப்பிரமணியன் தற்கொலைக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பணிச் சுமையே காரணம் எனக்கூறி உறவினா்கள் வேதாரண்யம்- நாகை பிரதான சாலையில் சடலத்துடன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

கோட்டாட்சியா் திருமால், துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் உள்ளிட்ட போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கா ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க