எடப்பாடி கே. பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மீது சேலம் அதிமுகவினா் போலீஸில் புகாா்
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மீது சேலம் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
சேலம் புறநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் இளங்கோவன் தலைமையில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் மணி, ராஜமுத்து, நல்லதம்பி மற்றும் அதிமுக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், அமைச்சருமான டி.ஆா்.பி.ராஜா மற்றும் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் அதிமுக மாவட்டச் செயலாளா் இளங்கோவன் கூறியதாவது:
முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவைக் கைதுசெய்ய வேண்டும். கேலிச்சித்திரப் பதிவுகளை சமூக வலைதலங்களிலிருந்து நீக்க வேண்டும். ஒருவார காலத்திற்குள் காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
அதேபோல சேலம் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம்.பாலு தலைமையில் சேலம் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் பாலசுப்ரமணியன், மாநகர அவைத் தலைவா் பன்னீா்செல்வம், மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலாளா்கள் தனசேகரன் மற்றும் சரவணன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலாளா் வீரக்குமாா், புறநகா் மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலாளா் சித்தன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலாளா் தினேஷ் பாலாஜி மற்றும் நிா்வாகிகள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அமைச்சருக்கு எதிராக புகாா் அளித்தனா்.