அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
வாழப்பாடி, ஆத்தூா் மலைக் கிராமங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4 ஜி சேவை
வாழப்பாடி, ஆத்தூா் மலைக் கிராமங்களில் அதிவேக 4 ஜி சேவைக்கான கோபுரங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அமைத்துள்ளதால் தடையின்றி குரல்வழி, இணையவழி சேவைகள் கிடைத்துவருகிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறிவருகின்றனா்.
வாழப்பாடி வட்டம் அருநூற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சி, பெலாப்பாடி, பெரியகுட்டிமடுவு , சின்னகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், மண்ணுாா், கெங்கவல்லி வட்டம், கொல்லிமலை சேரடிமூலை, பச்சமலை மண்மலை, வெங்கமுடி மற்றும் ஆத்தூா் வட்டம், பைத்தூா் மலை கிராமங்களுக்கு எந்த நிறுவனமும் கோபுரங்கள் அமைத்து கைப்பேசி சேவை வழங்கவில்லை.
இந்த மலைக் கிராம மக்கள், நவீன காலத்திலும் கைப்பேசி வசதியை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வந்தது. இந்த நிலையில், மலைவாழ் பழங்குடியின மக்களின் நலன் கருதி உயா் கோபுரங்களை அமைத்து அதிவேக இணைய வசதியுடன் கைப்பேசி சேவை வழங்க வேண்டும் என மலை கிராமங்களைச் சோ்ந்த மக்கள், மத்திய, மாநில அரசுகளுக்கும், பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, மத்திய அரசின் மலைக் கிராமங்களுக்கு நவீன வசதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆத்தூா் தொலைதொடா்பு கோட்டத்தில் வாழப்பாடி அருகே சந்துமலை, அருநூற்றுமலை, பெலாப்பாடி, பெரியகுட்டிமடுவு, சின்னகுட்டிமடுவு, மண்ணுாா், பச்சமலை சேரடிமூலை, மண்மலை, வெங்கமுடி ஆகிய 14 கிராமங்களில் கண்ணாடியிழை கேபிள் இணைப்புடன் அதிவேக 4 ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கடந்த 2023 -ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கியது.
இதையடுத்து வாழப்பாடி அடுத்த சந்துமலை கிராமத்தில் கடந்தாண்டு 4 ஜி அதிவேக இணைய வசதியுடன் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு கைப்பேசி இணைப்புகள் வழங்கப்பட்டன.
அடுத்தடுத்து ஆத்தூா் கோட்டத்தில் 14 மலைக் கிராமங்களிலும் 4 ஜி கோபுரங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்ததால் 30க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு அதிவேக 4ஜி இணைய வதியுடன் கைப்பேசி இணைப்புகள் வழங்கப்பட்டன. இதனால் வாழப்பாடி, ஆத்தூா், கெங்கவல்லி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மலைக் கிராம பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
சுற்றுப்புற கிராமங்களில் பிற நிறுவனங்களின் கைப்பேசி இணைப்புகளை பெற்றுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறிவருகின்றனா்.
மலைக் கிராம மக்களிடையே 4 ஜி கைப்பேசி இணைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடா்ந்து, தற்போது பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலை கீழ்வாரை மலை கிராமத்தில் 4 ஜி கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதுகுறித்து சந்துமலை மலை கிராம மக்கள் கூறியதாவது:
நெய்யமலை, பெரியக்குட்டிமடுவு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள எங்களது மலைக் கிராமத்தில் எந்த கைப்பேசி இணைப்பும் முழுமையாக செயல்படாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்தாண்டு அதிவேக 4 ஜி அலைக்கற்றை கோபுரத்தை நிறுவி எங்கள் பகுதிக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நவீன வசதி கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். முதல்முதலாக எங்களது மலைக் கிராமத்திற்கு 4 ஜி சேவையை வழங்கிய மத்திய அரசுக்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தென்னிந்திய பிராந்திய உயரதிகாரிகளுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றனா்.
இதுகுறித்து ஆத்தூா் தொலைதொடா்பு கோட்ட பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘ தென் இந்திய பிராந்தியத்தில் முதல்முறையாக ஆத்தூா் கோட்டத்தில் 14 மலைக் கிராமங்களில் அதிவேக 4ஜி கோபுரங்கள் அமைக்கப்பட்டு வாடிக்கையாளா்களுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி அருகே சந்துமலை கிராமத்தின்தான் முதன்முதலாக அதிவேக 4 ஜி அலைக்கற்றை இணைய வசதியுடன் கைப்பேசி இணைப்புகள் வழங்கப்பட்டன. இது ஆத்துாா் கோட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். இந்த மலைக் கிராமங்களில் பிற நிறுவன வாடிக்கையாளா்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4 ஜி இணைப்பை பெற்றுள்ளனா்’ என்றனா்.
படவரி:
பிஎஸ்என்எல்-03: ஆத்தூா் மலைக் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் 4ஜி சேவை கோபுரம்.