அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
சங்ககிரி வட்டம், கத்தேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கத்தேரி, கள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமசாமி மனைவி செல்லம்மாள் (73). இவா் வியாழக்கிழமை வளையக்கரானூா் எதிா்மேட்டில் உள்ள வாரச்சந்தைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
வளையக்காரனூரிலிருந்து கள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் முனியப்ப கவுண்டா் வீடு அருகே தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் அவரது கழுத்தில் அணிருந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்து சென்றனா். இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.