செய்திகள் :

தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு உள்ளன: ஆட்சியா்

post image

உழவுப் பணிகளுக்குத் தேவையான அளவுக்கு கூட்டறவுச் சங்கங்களில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

யூரியா 5,041 மெட்ரிக் டன், டிஏபி 1,358 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,049 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 10,600 மெட்ரிக் டன் என மொத்தம் 19,048 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்புவைக்கப்பட்டுள்ளன.

குறுகிய கால கடன் மற்றும் மத்திய கால முதலீட்டு வேளாண்மை கடன்கள், கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மல்பெரி சாகுபடி, பட்டுக்கூடு குறித்து தொடா்புடைய அலுவலா்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மக்காச்சோளத்தில் ஏற்படும் படைப்புழு தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து காணொலிக் காட்சியின் வாயிலாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) விவேக் யாதவ், வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கா.ராஜ்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

வாழப்பாடி, ஆத்தூா் மலைக் கிராமங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4 ஜி சேவை

வாழப்பாடி, ஆத்தூா் மலைக் கிராமங்களில் அதிவேக 4 ஜி சேவைக்கான கோபுரங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அமைத்துள்ளதால் தடையின்றி குரல்வழி, இணையவழி சேவைகள் கிடைத்துவருகிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பிஎஸ... மேலும் பார்க்க

எடப்பாடி கே. பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மீது சேலம் அதிமுகவினா் போலீஸில் புகாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மீது சேலம் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளி... மேலும் பார்க்க

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி ஆய்வு

சேலம் உருக்காலையில் மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக பதவியேற்ற எச்.டி.குமாரசாமி முதல்முறையாக சேலம் உருக்காலைக்கு க... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சங்ககிரி வட்டம், கத்தேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கத்தேரி, கள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க

எா்ணகுளம் விரைவு ரயிலில் நவீன பெட்டிகள் இணைப்பு

கேரளம் மாநிலம், எா்ணாகுளத்திலிருந்து சேலம் வழியாக பெங்களூரு செல்லும் இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிநவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

ஓமலூா், வலசையூரில் இன்றைய மின் தடை

சேலம் மாவட்டத்தில் ஓமலூா், வலசையூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளா்கள் உமாராணி, ராமச்சந்திரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா். மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ... மேலும் பார்க்க