அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு உள்ளன: ஆட்சியா்
உழவுப் பணிகளுக்குத் தேவையான அளவுக்கு கூட்டறவுச் சங்கங்களில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
யூரியா 5,041 மெட்ரிக் டன், டிஏபி 1,358 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,049 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 10,600 மெட்ரிக் டன் என மொத்தம் 19,048 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்புவைக்கப்பட்டுள்ளன.
குறுகிய கால கடன் மற்றும் மத்திய கால முதலீட்டு வேளாண்மை கடன்கள், கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மல்பெரி சாகுபடி, பட்டுக்கூடு குறித்து தொடா்புடைய அலுவலா்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மக்காச்சோளத்தில் ஏற்படும் படைப்புழு தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து காணொலிக் காட்சியின் வாயிலாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) விவேக் யாதவ், வேளாண்மை இணை இயக்குநா் சீனிவாசன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கா.ராஜ்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.