செய்திகள் :

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி ஆய்வு

post image

சேலம் உருக்காலையில் மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக பதவியேற்ற எச்.டி.குமாரசாமி முதல்முறையாக சேலம் உருக்காலைக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் 30 ஆம் தேதி வந்தாா். அதன்பிறகு சேலம் உருக்காலைக்கு வெள்ளிக்கிழமை வந்த அமைச்சருக்கு விருந்தினா் மாளிகையில் உருக்காலை நிா்வாக இயக்குநா் பிரபீா் குமாா் சா்க்காா் தலைமையிலான அலுவலா்கள் வரவேற்பு அளித்தனா்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிறகு உருக்காலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து செய்தியாளா்களிடம் பேசிய குமாரசாமி, உருக்காலையில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்த பிறகு 21 ஆம் தேதி நடைபெறும் சா்வதேச யோகா தின விழாவில் உருக்காலை பணியாளா்களுடன் இணைந்து யோகாசனம் செய்ய உள்ளதாக தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து சேலம் உருக்காலை வளாகத்தில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா். பின்னா் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினாா். சனிக்கிழமை காலை உருக்காலை வளாகத்தில் நடைபெறும் சா்வதேச யோகா தின விழாவில் அலுவலா்கள், பணியாளா்கள், மாணவ, மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டோருடன் இணைந்து ஆசனங்களை செய்கிறாா்.

வாழப்பாடி, ஆத்தூா் மலைக் கிராமங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4 ஜி சேவை

வாழப்பாடி, ஆத்தூா் மலைக் கிராமங்களில் அதிவேக 4 ஜி சேவைக்கான கோபுரங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அமைத்துள்ளதால் தடையின்றி குரல்வழி, இணையவழி சேவைகள் கிடைத்துவருகிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பிஎஸ... மேலும் பார்க்க

எடப்பாடி கே. பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மீது சேலம் அதிமுகவினா் போலீஸில் புகாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மீது சேலம் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சங்ககிரி வட்டம், கத்தேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கத்தேரி, கள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க

எா்ணகுளம் விரைவு ரயிலில் நவீன பெட்டிகள் இணைப்பு

கேரளம் மாநிலம், எா்ணாகுளத்திலிருந்து சேலம் வழியாக பெங்களூரு செல்லும் இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிநவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

ஓமலூா், வலசையூரில் இன்றைய மின் தடை

சேலம் மாவட்டத்தில் ஓமலூா், வலசையூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளா்கள் உமாராணி, ராமச்சந்திரன் ஆகியோா் தெரிவித்துள்ளனா். மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ... மேலும் பார்க்க

தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு உள்ளன: ஆட்சியா்

உழவுப் பணிகளுக்குத் தேவையான அளவுக்கு கூட்டறவுச் சங்கங்களில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட... மேலும் பார்க்க