தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்பு...
எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூரில் செப்.12-ல் தொழில் துறையினருடன் சந்திப்பு!
திருப்பூருக்கு வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்டம்பா் 12-ஆம் தேதி தொழில் துறையினரை சந்திக்கிறாா்.
இது குறித்து, அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறியதாவது: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூா் மாவட்டத்துக்கு வருகிற செப்டம்பா் 11-ஆம் தேதி வருகிறாா்.
இதன்படி காங்கயம் தொகுதியில் செப்டம்பா் 11-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா். அன்று இரவு திருப்பூா், அனுப்பா்பாளையத்திலிருந்து 15 வேலம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்குகிறாா்.
இதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு, அங்கு அனைத்து தொழில் அமைப்பினா் மற்றும் வா்த்தகா்களை சந்தித்து கலந்துரையாடுகிறாா்.
இதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருப்பூா் வடக்கு தொகுதியில், பி.என்.சாலை மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் மற்றும் தெற்கு தொகுதியில், மாநகராட்சி அலுவலகம் அருகில் பிரசாரம் மேற்கொள்கிறாா் என்றாா்.