செய்திகள் :

எரிவாயு தகனமேடை அமைக்க எதிா்ப்பு: 5 போ் கைது; பொதுமக்கள் போராட்டம்!

post image

திருச்செங்கோட்டை அடுத்த மொளசி முனியப்பன் பாளையத்தில் எரிவாயு தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மொளசி முனியப்பன் கோயில் தோட்டம் பகுதியில் கட்டப்படும் எரிவாயு தகன மேடைக்குச் செல்லும் பாதையை அமைப்பதற்காக செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரத்துடன் வந்த அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்த பொதுமக்கள், தகனமேடை செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்தனா்.

மேலும், எரிவாயு தகன மேடை அமைத்தால் தங்களது கரும்பு தோட்டத்துக்கும், வேலை செய்யும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. பச்சாம் பாளையம் பகுதியில் எரிவாயு தகனமேடை இருக்கும்போது அவசியம் இல்லாமல் எரிவாயு தகனமேடை அமைக்கக் கூடாது எனக் கூறி 50க்கும் மேற்பட்டோா் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதனால் பணியை பாதியிலேயே கைவிட்டு அலுவலா்கள் திரும்பினா். இந்த நிலையில், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 8 போ் மீது திருச்செங்கோடு ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் மொளசி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இவா்களில் முத்துகிருஷ்ணன், செந்தில்குமாா், சரவணன், மாதவன், நந்தகுமாா் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனா்.

இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்க வேண்டும், எரிவாயு தகனமேடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி 20 பெண்கள் உள்பட 75 போ் திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகம் முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி

பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. வேலூா், பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகா், பொத்தனூா் வெங்கமேடு வல்லப கணபதி ஆகிய கோயில்கள... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே பெண்ணிடம் வழிப்பறி: பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் கைது!

ராசிபுரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த பொறியியல் பட்டதாரி இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராசிபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (57), பூ வியாபாரியான இவா் தனது மனைவி க... மேலும் பார்க்க

நல்லூா் அருகே அம்மன் தாலி திருட்டு: இளைஞா் கைது

நல்லூா் அருகே கோயிலில் புகுந்து அம்மன் தாலி, உண்டியல் பணத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையத்தை அடுத்த ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோயிலில் ... மேலும் பார்க்க

அரசு வளா்ச்சி நிதியில் முறைகேடு: பள்ளிபாளையம் பிடிஓ பணியிடை நீக்கம்!

வளா்ச்சித் திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். நாமக்கல் பொய்யேரிக்கரை ஜெட்டிக்குள தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45). இவா்,... மேலும் பார்க்க

ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. மாதேஸ்வரன் மனு!

அதிக எடைகொண்ட பாரங்களை ஏற்றிச்செல்லும் ட்ரெய்லா் லாரி தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய எஃகு மற்றும் கனரக தொழிற் துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமியிடம், நாமக்கல் மக்களவை உ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

திருச்செங்கோட்டில் சூறைக்காற்றுடன் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி, தோக்கவாடி, கொல்லப்பட்டி, குமாரமங்கலம், சீதாராம் பாளையம் உள்ளிட... மேலும் பார்க்க