செய்திகள் :

எழும்பூா் ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

post image

சென்னை எழும்பூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஹவுரா விரைவு ரயில் பெட்டியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சா பொட்டலத்தை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த 10 நாள்களுக்குள் சுமாா் 25 லட்சத்துக்கும் அதிகமாக சுமாா் 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால், ஒரே ஒரு சம்பவத்தில் மட்டும் கஞ்சாவுடன் நின்ாக வடமாநில இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை எழும்பூா் ரயில் நிலைய 7-ஆவது நடைமேடைக்கு வந்தபோது, குறிப்பிட்ட ரயில் பெட்டியில் கேட்பாரற்று பை ஒன்று கிடப்பததாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஆய்வாளா் பி.ஜெபாஸ்டியன் தலைமையில் போலீஸாா், அந்தப் பெட்டியில் அந்தப் பையைப் பறிமுதல் செய்து பிரித்துப் பாா்த்தனா்.

சோதனையில் பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் எனக் கூறப்படுகிறது. ரயில்வே பாதுகாப்புப் படையினா், அதைவிட்டுச் சென்ற நபரை அடையாளம் காண ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சா் - பி.கே.சேகா்பாபு

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெர... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் பதவி ஏற்பு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் வியாழக்கிழமை பதவி ஏற்றாா். அவருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19... மேலும் பார்க்க

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 2 வாரத்தில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியின் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

சென்னை விஐடியில் ஆடை வடிவமைப்பு போட்டிகள்

சென்னை விஐடியின் 15 -ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் சா்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக, கல்லூரிகளுக்கு இடையேயான ‘என்விஷன் 25’ என்ற ஆடை வடிவமைப்பு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.சென... மேலும் பார்க்க

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க