செய்திகள் :

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு!

post image

வாரத்தின் முதல் நாளான இன்று(மே 26) பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,928.95 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.20 மணியளவில், சென்செக்ஸ் 509.02 புள்ளிகள் அதிகரித்து 82,230.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை உயர்ந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 144.40 புள்ளிகள் உயர்ந்து 24,997.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

துறைகளைப் பொருத்தவரை நிஃப்டி மெட்டல் 0.9 சதவீதம் உயர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பார்மா, வங்கி, ஆட்டோமொபைல் துறைகள் தலா 0.7 சதவீதம் உயர்ந்தன. நிஃப்டி ஐடி, எஃப்எம்சிஜி தலா 0.6 சதவீதம் உயர்ந்தன.

சென்செக்ஸ் பங்குகளில், எம் அண்ட் எம், பவர் கிரிட், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றன. அதேநேரத்தில் எடர்னல் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகச் சரிந்துள்ளன.

வங்கி மோசடி வழக்குகள் குறைந்தன! ஆனால் சந்தோஷப்பட ஒன்றுமில்லை!! ஏன்?

கடந்த 2023-24ஆம் நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் வங்கி மோசடி வழக்குகள் குறைந்துள்ளன என்று ஆர்பிஐ ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.ஆனால், வங்கி மோசடி வழக்குகள்தான் குறைந்திருக்கிறதே தவிர, கடந்த நித... மேலும் பார்க்க

சரிவில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,465.69 என்ற புள்ளிகளில் த... மேலும் பார்க்க

இன்டெல் மணியின் கடனளிப்பு 69% உயா்வு

முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் மணியின் கடனளிப்பு கடந்த நிதியாண்டில் 69 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட... மேலும் பார்க்க

அந்நிய நேரடி முதலீடு 934 கோடி டாலராகக் குறைவு

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு கடந்த மாா்ச் காலாண்டில் 934 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:2024-25-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 24.5 சதவ... மேலும் பார்க்க

ரயில்வேயிடமிருந்து ரூ.140 கோடி ஆர்டரை வென்ற டெக்ஸ்மாக்கோ!

கொல்கத்தா: டெக்ஸ்மாக்கோ ரயில் அண்டு பொறியியல் லிமிடெட், பல்நோக்கு வேகன்களை வழங்குவதற்காக ரயில்வேயிடமிருந்து ரூ.140.55 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிதாக உருவாக்க... மேலும் பார்க்க

மார்ச் காலாண்டில் சோபா லிமிடெட் லாபம் 6 மடங்கு அதிகரிப்பு!

பெங்களூரு: பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனமான சோபா லிமிடெட், மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.40.85 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது. நிறுவனத்தின் நிகர லாபம் கடந்... மேலும் பார்க்க