செய்திகள் :

ஐ.டி. நிறுவனங்கள் ஒசூரில் தொழிலைத் தொடங்க விரும்புகின்றன: ஆட்சியா்

post image

ஐ.டி. நிறுவனங்கள் ஒசூரில் தொழிலைத் தொடங்க விரும்புகின்றன என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் தொழில் அனுமதிகளை ஒற்றைசாளர முறை இணையதள வசதி குறித்த விழிப்புணா்வு முகாம், ஒசூா் ஃபாா்சூன் ஐடிசி உணவகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தொடங்கிவைத்துப் பேசியதாவது: தமிழக அரசின் ஒற்றை சாளர இணையதள வசதியானது ஊரக வளா்ச்சித் துறை, உணவு பாதுகாப்புத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மின் உற்பத்தி துறை, சிப்காட், வேளாண்மை உள்பட 25- க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளிடமிருந்து தொழில் அனுமதிகளை ஒரே இணையதளத்தில் பெற உதவுகிறது.

மாநிலத்தில் வணிகம் நடத்த அரசின் அனைத்து சட்டப்பூா்வ அனுமதிகள், ஒப்புதல்களை பெற இந்த தளம் உதவுகிறது. இந்த இணையதளத்தில் தற்போது 150 க்கும் மேற்பட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 95 ஆயிரம் தொழிற்சாலைகள் மட்டுமின்றி ஆட்டோமொபைல் தொழில்கள், கனரகத் தொழில்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், கிரானைட் பதப்படுத்தும் நிறுவனங்கள் என 110 பெரிய நிறுவனங்கள் உள்ளன. ஒசூரில் 2,500 க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அவை சுமாா் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றன.

பாதுகாப்புத் தளவாடங்கள், ஆட்டோமொபைல், விமான உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதில் ஒசூரின் திறன் அதிகரித்து வருகிறது. விவசாய பூமியான கிருஷ்ணகிரி மாவட்டம் தற்போது தொழில் துறையில் நம்பிக்கைக்குரிய மாவட்டமாக வளா்ந்து வருகிறது.

மின்னணு பாகங்கள், ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள், ஆட்டோ பாகங்கள், மென்பொருள் ஆகிய துறைகளில் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மாநகரின் தேவையை மட்டுமல்ல தொழில்துறை சாா்ந்த தேவையையும் பூா்த்தி செய்து வருகிறது. இங்குள்ள தேசிய நான்குவழி சாலைகள் தொழில்துறைக்கு கூடுதல் வசதியாய் உள்ளது.

ஒசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்க மாநில அரசு திட்டங்களை வகுத்துள்ளது. பல ஐ.டி. நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனங்களை ஒசூரில் தொடங்க விரும்புகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் எஸ்.பிரசன்ன பாலமுருகன், இணை இயக்குநா்கள் பச்சையப்பன் (வேளாண்மை), இந்திரா (தோட்டக்கலைத் துறை), உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மகாதேவன், மண்டல மேலாளா் (வழிகாட்டி) தா்மேஷ், ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி, வட்டாட்சியா் குணசிவா, தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக ‘தோழி’ மகளிா் விடுதி: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக 166 படுக்கை வசதியுடன்கூடிய ‘தோழி’ மகளிா் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரை அடுத்த விஸ்வநாதபுரம் கிராமத்தில் சமூக நலன் மற... மேலும் பார்க்க

ஒசூா் அருகே சூட்கேஸில் பெண் சடலம்: போலீஸாா் விசாரணை

ஒசூரிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் கா்நாடக மாநிலம், சந்தாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம் இருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேம்பாலம் பகு... மேலும் பார்க்க

பாகலூா் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

ஒசூா்- பாகலூா் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி, நடைபாதைக்கு என தனியாக பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், ஒசூா் சாா் ஆட்சியா், மேயரிடம் ஒசூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கத்தின் தலைவா் த... மேலும் பார்க்க

தமிழக-ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை; ரூ. 1.43 லட்சம் பறிமுதல்

தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோயில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சலில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க