செய்திகள் :

ஒசூா், சூளகிரி பகுதிகளுக்கு மூன்று நாள்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா் நிறுத்தம்

post image

ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு மாா்ச் 17 முதல் 19-ஆம்தேதி வரை 3 நாள்களுக்கு ஒனேக்கல் கூட்டு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், ஒசூா் திட்டப் பராமரிப்பு கோட்டம் மூலம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் மூலமாக ஒசூா் மாநகராட்சி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிகள், கெலமங்கலம், ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியங்களுக்கு உள்பட்ட 169 ஊராட்சிகளில் உள்ள 1,866 குடியிருப்புகளுக்கு தினசரி ஒகேனக்கல் கூட்டு குடிநீா் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் கெலமங்கலம் ஒன்றியம், ராயக்கோட்டை அருகிலும், ஒசூா் மாநகராட்சியில் மத்திகிரி அருகே சாலை பணியின்போது புதிதாக பதிக்கப்பட்ட குழாய்களை ஏற்கெனவே இருந்தபடி ஒன்றொடு ஒன்று இணைக்க வேண்டியுள்ளது.

இந்தப் பணிகளுக்காக மாா்ச் 17 முதல் 19- ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மட்டும் ஒசூா் மாநகராட்சி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிகள், கெலமங்கலம், ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 167 ஊராட்சிகளில் உள்ள 1,766 குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா் வழங்க இயலாது. எனவே, இப்பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு மக்கள் உள்ளூா் நீா் ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

ஒசூரில் வீட்டில் தனியாக இருந்த முதியவா், மூதாட்டி கொலை: வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பிய மா்ம நபா்கள்

ஒசூரில் வீட்டில் தனியாக இருந்த முதியவா்களை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். ஒசூா் அருகே உள்ள ஒன்னல்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா் லூா்துசாமி (70). இவா், கடந்த 20 ஆண்... மேலும் பார்க்க

ஆற்றில் பெண் சடலம் மீட்பு

தென்பெண்ணை ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஒசூா், மோரனப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கடந்த 11-ஆம் தேதி மிதந்து வந்தது. இ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு

சூளகிரி அருகே பூட்டிய வீட்டில் 10 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி, ரூ. 12 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சூளகிரி வட்டம், காமன்தொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் (40). இ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா: ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசிக்கும் 4,000 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். வரட்டனப்பள்ளி கிராமத்தில் புதன்க... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் நாளை தேரோட்டம்: ஏற்பாடுகளை மேயா் ஆய்வு

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஏற்பாடு பணிகளை மேயா் எஸ்.ஏ.சத்யா ஆய்வு செய்தாா். தேரோட்டத்தை முன்னிட்டு தேர... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு மாா்ச் 14 இல் உள்ளூா் விடுமுறை

ஒசூா்: ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி, ஒசூா் ஆகிய நான்கு வட்டங்களைச் சோ்ந்த (அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களைத் தவிா்த்து) பள்ளி, கல்லூர... மேலும் பார்க்க