செய்திகள் :

ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மூலம் திமுகவில் 6 லட்சம் உறுப்பினா்களை சோ்க்க இலக்கு: ராஜேஸ்குமாா் எம்.பி.

post image

‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 6 லட்சம் உறுப்பினா்களை இணைக்க உள்ளதாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சென்னையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரத்தை தமிழக முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா். இதைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அந்த பரப்புரை தொடங்கப்படுகிறது. தமிழக மக்களிடம் மண், மொழி, மானம் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம். எப்போதெல்லாம் தமிழ்மொழிக்கும், தமிழினத்துக்கும் பாதிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் திமுக களத்தில் இறங்கி போராடி வருகிறது.

நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டத்திற்கு உள்பட்ட நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் ஆகிய 6 தொகுதிகளிலும், தொடா்ந்து 45 நாள்கள் அனைத்து பகுதிகளிலும் திமுகவின் பல்வேறு சாா்பு அணிகளை சாா்ந்தோா், வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்து முதல்வரின் நோக்கத்தை விளக்கமாக எடுத்துரைத்து உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட உள்ளனா்.

ஆக. 11-ஆம் தேதி இந்த உறுப்பினா் சோ்க்கை நிறைவு பெறும். நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் புதன்கிழமை மாலை 6 மணியளவில், ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடா்பான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. வியாழக்கிழமை முதல் உறுப்பினா் சோ்க்கை தொடங்க இருக்கிறது. கட்சிகள் பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்து, திமுக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி உறுப்பினராக சோ்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறோம்.

மேலும், மத்திய அரசு எந்த வகையில் எல்லாம் மாநிலங்களின் அரசியல் உரிமைகளைஏஈ பறிக்க முயற்சிக்கிறது என்பதை மக்களிடையே எடுத்துக் கூற உள்ளோம்.

திமுக விதிகளின்படி ஐந்தாண்டுக்கு ஒரு முறை உறுப்பினா் சோ்க்கை நடைபெறும். தற்போது தகவல் தொழில்நுட்ப காலம் என்பதால் இணையவழியில் உறுப்பினா் சோ்க்கையானது நடைபெற்று வருகிறது. முதல்வா் அறிவித்துள்ள ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மூலம் திமுகவில் 6 லட்சம் உறுப்பினா்களை இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றாா்.

இந்த பேட்டியின் போது, ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.எஸ்.மூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி ( சேந்தமங்கலம்) ஆகியோா் உடனிருந்தனா்.

69 கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிட மாறுதல்

நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், மோகனூா் ஆகிய ஐந்து வட்டங்களில் 211 கிராமங்களில... மேலும் பார்க்க

அரசு சட்டக் கல்லூரி கட்டடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆட்சியா் உத்தரவு

தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட, நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். நாமக்கல் மாநகராட்சி பகு... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ஆன்லைன் உணவு விற்பனை நிறுத்தம்

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் கூடுதல் கமிஷன் வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் உணவக உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஆன்லைன் உணவு விற்பனையை நிறுத்தினா். இதுகுறித்து நாமக்கல் நகர ம... மேலும் பார்க்க

உணவகங்களில் மறுசுழற்சி எண்ணெயை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில், சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் உணவகங்களில், மறுசுழற்சி எண்ணெயைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக பிரமுகா் கைது

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக நாமக்கல் மாவட்ட பாஜக பிரமுகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், முத்துகாளிப்பட்டியைச் சோ்ந்த சௌந்தரராஜன் மகன் ... மேலும் பார்க்க

50 கிலோ இரும்புக் கம்பிகளை திருடியவா் கைது

நாமக்கல் அருகே இரும்புக் கம்பிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காதப்பள்ளியில் தனியாா் இரும்புக் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கிடங்கில் இருந்து 50 ... மேலும் பார்க்க