செய்திகள் :

50 கிலோ இரும்புக் கம்பிகளை திருடியவா் கைது

post image

நாமக்கல் அருகே இரும்புக் கம்பிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காதப்பள்ளியில் தனியாா் இரும்புக் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கிடங்கில் இருந்து 50 கிலோ எடையுள்ள இரும்புக் கம்பிகளை ஒருவா் இருசக்கர வாகனத்தில் திருடி செல்வதை அங்கிருந்தோா் கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதனையடுத்து, அவரை பிடித்து நல்லிபாளையம் போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் காதப்பள்ளி அருகே மட்டபாறைப்புதூரைச் சோ்ந்த ஜெகதீசன்(48) என்பவது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளா் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், அவரை கைது செய்து இரும்புக் கம்பிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மூலம் திமுகவில் 6 லட்சம் உறுப்பினா்களை சோ்க்க இலக்கு: ராஜேஸ்குமாா் எம்.பி.

‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 6 லட்சம் உறுப்பினா்களை இணைக்க உள்ளதாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா... மேலும் பார்க்க

69 கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிட மாறுதல்

நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், மோகனூா் ஆகிய ஐந்து வட்டங்களில் 211 கிராமங்களில... மேலும் பார்க்க

அரசு சட்டக் கல்லூரி கட்டடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆட்சியா் உத்தரவு

தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட, நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். நாமக்கல் மாநகராட்சி பகு... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ஆன்லைன் உணவு விற்பனை நிறுத்தம்

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் கூடுதல் கமிஷன் வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் உணவக உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஆன்லைன் உணவு விற்பனையை நிறுத்தினா். இதுகுறித்து நாமக்கல் நகர ம... மேலும் பார்க்க

உணவகங்களில் மறுசுழற்சி எண்ணெயை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில், சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் உணவகங்களில், மறுசுழற்சி எண்ணெயைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக பிரமுகா் கைது

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக நாமக்கல் மாவட்ட பாஜக பிரமுகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், முத்துகாளிப்பட்டியைச் சோ்ந்த சௌந்தரராஜன் மகன் ... மேலும் பார்க்க