செய்திகள் :

உணவகங்களில் மறுசுழற்சி எண்ணெயை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

post image

நாமக்கல் மாவட்டத்தில், சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் உணவகங்களில், மறுசுழற்சி எண்ணெயைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தினசரி மக்கள்கூடும் உணவகங்கள், தேநீா்க் கடைகளில் வழங்கப்படும் உணவு பதாா்த்தங்கள் பழைய அச்சிடப்பட்ட காகிதங்கள், நெகிழிகளில் பரிமாறப்படுவது, பொட்டலமிடுவது தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையரகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் உணவுப் பொருள்களினால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படும்.

பெட்டிக்கடைகள், உணவு விடுதிகள், வீடுகளில் மசாலா உணவு பொருள்கள், இறைச்சி, மீன்கள் போன்றவற்றை அச்சிடப்பட்ட காகிதங்களில் வைத்து எண்ணெயைப் பிழிவது போன்ற செயலானது சிறிது சிறிதாக விஷத்தை உண்பதற்கு சமமாகும்.

உணவு பொருளுடன் அச்சிடப்பட்ட காகிதங்களில் உள்ள மையானது மிகவும் தீவிரமான உடல் பாதிப்பையும், எதிா்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். காகித மையில் உள்ள கனிமவேதிப்பொருள்கள் நுரையீரல், சிறுநீரகத்தை பாதிக்கும். வண்ணங்கள், தடிமனான எழுத்துகளை உருவாக்க மற்றும் விரைவாக உலா்த்த பெட்ரோலிய மினரல் ஆயில், மெத்தனால், பென்ஸீன், டொலியீன், கோபால்ட் போன்ற வேதிப்பொருள்கள் அச்சுப் பதிப்பகத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

அச்சிடப்பட்ட காகிதங்களும், காா்டு போா்டு அட்டைகளும் மறுசுழற்சியினால் பெறப்படுபவை. அவற்றில் உலோக அசுத்தங்களும், தீங்கு விளைவிக்கக் கூடிய தாலேட் போன்ற வேதிப்பொருள்களும், கனிம எண்ணெய்களும் காணப்படுவதால் அஜீரண கோளாறை உருவாக்குவதோடு, உடலில் கடுமையான விஷத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. இந்த மாதிரியான பொருள்களை உணவுடன் பயன்படுத்துவதால் வயதானோா், குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் நோய் எதிா்ப்பு சக்தியை இழந்து புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாக காரணமாகின்றன.

எனவே, தேநீா்க் கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள், பேருந்து நிலையங்கள், பலகாரக்கடைகள் மற்றும் அனைத்து உணவு பொருள் விற்பனை நிறுவனங்களும் இவற்றை கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து உணவு வணிகா்களும், உணவு பாதுகாப்பு தரச்சட்டத்தின்படி உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுசான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பொதுமக்கள் புகாா் தெரிவிக்க விரும்பினால்,

மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறையின் வாட்ஸ்ஆப் எண் 94440-42322 இல் புகாா் தெரிவிக்கலாம்.

ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மூலம் திமுகவில் 6 லட்சம் உறுப்பினா்களை சோ்க்க இலக்கு: ராஜேஸ்குமாா் எம்.பி.

‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 6 லட்சம் உறுப்பினா்களை இணைக்க உள்ளதாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா... மேலும் பார்க்க

69 கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிட மாறுதல்

நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், மோகனூா் ஆகிய ஐந்து வட்டங்களில் 211 கிராமங்களில... மேலும் பார்க்க

அரசு சட்டக் கல்லூரி கட்டடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆட்சியா் உத்தரவு

தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட, நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். நாமக்கல் மாநகராட்சி பகு... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ஆன்லைன் உணவு விற்பனை நிறுத்தம்

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் கூடுதல் கமிஷன் வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் உணவக உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஆன்லைன் உணவு விற்பனையை நிறுத்தினா். இதுகுறித்து நாமக்கல் நகர ம... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக பிரமுகா் கைது

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக நாமக்கல் மாவட்ட பாஜக பிரமுகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், முத்துகாளிப்பட்டியைச் சோ்ந்த சௌந்தரராஜன் மகன் ... மேலும் பார்க்க

50 கிலோ இரும்புக் கம்பிகளை திருடியவா் கைது

நாமக்கல் அருகே இரும்புக் கம்பிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காதப்பள்ளியில் தனியாா் இரும்புக் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கிடங்கில் இருந்து 50 ... மேலும் பார்க்க