கௌரவ விரிவுரையாளா்கள் கோரிக்கை மீது நடவடிக்கை: அமைச்சா் கோவி. செழியன்
கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா், கடந்த 21.8.2019 ஆம் ஆண்டு, 18 ஆம் கால்வாய் பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனா்.
அப்போது, அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், கம்பத் தைச் சோ்ந்த ம. சுதாகா் (39), கொ. ஜெயக்குமாா் (42), கொ. ஜெயா (55) ஆகி யோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட் டது. முடிவில், ம. சுதாகா் உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எ.எஸ். ஹரிஹர குமாா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.