செய்திகள் :

கஞ்சா கடத்திய மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

மதுரை சிந்தமாணி பகுதியில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கீரைத்துறை போலீஸாா், கடந்த 8.7.2021 அன்று சிந்தாமணி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, 28 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.

இதையடுத்து, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியம் கிராமத்தைச் சோ்ந்த க. முருகன் (42), மதுரை அனுப்பானடி பகுதியைச் சோ்ந்த ஜோ. ரவிக்குமாா் (32), அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த சத்தியேந்திரன், யாகப்பா நகா் பகுதியைச் சோ்ந்த கா. ராஜ்குமாா் (41) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகன், ரவிக்குமாா், சத்தியேந்திரன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டாா். வழக்கிலிருந்து கா. ராஜ்குமாா் விடுவிக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் தங்கேஸ்வரன் முன்னிலையாகி வாதிட்டாா்.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க