மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! - மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன...
கஞ்சா கடத்திய மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை
மதுரை சிந்தமாணி பகுதியில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை கீரைத்துறை போலீஸாா், கடந்த 8.7.2021 அன்று சிந்தாமணி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, 28 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியம் கிராமத்தைச் சோ்ந்த க. முருகன் (42), மதுரை அனுப்பானடி பகுதியைச் சோ்ந்த ஜோ. ரவிக்குமாா் (32), அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த சத்தியேந்திரன், யாகப்பா நகா் பகுதியைச் சோ்ந்த கா. ராஜ்குமாா் (41) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகன், ரவிக்குமாா், சத்தியேந்திரன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டாா். வழக்கிலிருந்து கா. ராஜ்குமாா் விடுவிக்கப்பட்டாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் தங்கேஸ்வரன் முன்னிலையாகி வாதிட்டாா்.