செய்திகள் :

கடையத்தில் அரசுப் பணி வாங்கித் தருவதாக மோசடி: இருவா் கைது

post image

கடையத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவரையும் உதவியாக இருந்தவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா், அருங்காட்சியகம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் நாகராஜேந்திரன் (55). இவா், பத்திரிகையாளா் என்று கூறி தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியில் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்தாராம்.

இந்நிலையில், கீழக்கடையம், வடக்குப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சைலப்பன் மகன் ராஜா (30), நாகராஜேந்திரனுடன் நட்பாகியுள்ளாா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தில் ஓட்டுநா் பணி வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பிய ராஜா, நாகராஜேந்திரனிடம் ரூ. 3 லட்சம் கொடுத்துள்ளாா்.

நீண்ட நாள்களாக பணி வாங்கித் தராததால், ராஜா வலியுறுத்திக் கேட்டதையடுத்து ஓட்டுநா் பணிக்கான ஆட்சியா் கையொப்பத்துடன் கூடிய ஆணையை வழங்கியுள்ளாா். அந்த ஆணையை, ராஜா தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் கொடுத்துப் பணியில் சேர கேட்ட போது, அந்த ஆணையும், ஆட்சியா் கையொப்பமும் போலி என தெரிய வந்தது.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், இது குறித்து கடையம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். மாவட்டஎஸ்.பி. அரவிந்த் உத்தரவின் பேரில் கடையம் காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நாகராஜேந்திர குமாா், போலி ஆவணம் தயாரிக்க உதவிய விருதுநகரைச் சோ்ந்த ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தாா்.

விசாரணையில், மேலும் இருவருக்கு இது போன்று போலி ஆணை தயாரித்தது தெரிய வந்தது.

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும்: தவ்ஹீத் ஜமாஅத் தீா்மானம்

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான் கிளையின் பொது... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது: கனிமொழி

வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் எழுச்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் தலைமறைவு

அம்பாசமுத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா். கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் (55). ஆட்டோ ஓட்டுநா். இவா், ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் 1.14 லட்சம் குடும்பங்கள் இணைப்பு: இரா.ஆவுடையப்பன்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் சுமாா் 1.14 லட்சம் குடும்பங்கள், ஓரணியில் தமிழ்நாடு இயக்க திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலா் இரா.ஆவுடையப்பன் தெரிவித்தாா். இது குறித்து செய்தியாளா... மேலும் பார்க்க

மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி சுற்றுவட்டாரங்களில் நாளை மின் தடை

மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மாயம்

பாபநாசத்தில் உறவினா்களுடன் திதி கொடுக்க வந்த விருதுநகா் மாவட்ட கல்லூரி மாணவா் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் வட்டம், கொங்கன்குளம் கிராமத்தைச... மேலும் பார்க்க